தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 2. Oktober 2016

நவராத்திரி



உலக வாழ்வில் இன்றியமையாமைப் புலப்படுத்தும் தெய்கவீ வழிபாடுகளில் சக்தி வழிபாடும் ஒன்றாகும்.இது முப்பெரும்தேவிகளை வழிபடுவதன் ஊடாக வாழ்வில் நற்பண்புகளை வளர்க்க உதவுகின்றது.
சைவசமயத்தவகளால் அனுஷ்டிக்கப்படுகின்ற மிக முக்கிய விரதங்களின் ஒன்றான நவராத்திரி விரதம் அனைவராலும்கொண்டாடப்படுகின்றது. புரட்டாசி மாதத்தின் வளர்பிறை பிரதமை திதியில் தொடங்கி  இந்த விரதம் நவமி திதி வரை ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படுகின்றது.  நவராத்தியின் ஒன்பது நாட்களும் முப்பெரும்தேவிகளின் வழிபாடாக விஷேட வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்கையையும்,அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி இலக்குமியையும், அடுத்த மூன்று நாட்களும் கல்வியை வேண்டி சரஸ்வதிதேவியையும் வழிபாடு செய்வார்கள். 9ம் நாளன மஹாநவமி அன்று சரஸ்வதிபூஜை ,கலைமகள்பூஜை,ஆயுதபூஜை என்று வழிபாடு செய்வார்கள்.அன்றையதினம் புத்தகங்கள், கலை-இசைக் கருவிகள், ஆயுதங்கள் வைத்து வழிபாடு செய்வார்கள். இவ் விரதகாலத்தில்  பிரதமையில் கும்பம் வைத்து பூஜையை தொடங்குவர்.வீடுகளிலும், ஆலயங்களிலும் கொலு வைத்து அலங்காரம் செய்து பூஜையை சிறப்பிப்பார்கள்.தேவியரின் தோத்திரங்கள் பாராயணம் செய்து மேலும் சிறப்பாக வழிபடுவார்கள்.
வசுதேவருக்கும் தேவகிக்கும் பிறந்த குழந்தைகளை கம்சன் என்ற அசுரன் கொன்றான்.கண்ணனுக்கு முன்பு பிறந்த குழந்தையான அம்பிகையை அசுரன்  தூக்கியபோது அம்பிகையானவள் அவன் கையில் இருந்து மறைந்தாள். அசுரனை வெல்வதற்காக அம்பிகையான துர்கை  9 நாட்கள்  விரதமிருந்தாள். அதனையே நவராத்திரி என்றும்,9 ம் நாள் ஆயுதபூஜை செய்ததால் ஆயுதபூஜை  என்றும்,பத்தாம் நாள் அசுரனை ஜெயித்து உலகத்துக்கு  நன்மை செய்ததால்
  10–வது நாளான தசமி அன்று விஜயதசமி விழாவாக கொண்டாடப்படுகின்றது. 

 மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்ட அம்பாள், பத்தாவது நாளான தசமி அன்று வெற்றி பெற்றார். அதனால் விஜயதசமி வெற்றிக்குரிய நாளாக கருதப்படுகின்றது.அன்று ஏடு தொடக்குதல்,புதிய கலை ஆரம்பித்தல், அதன்பின் கும்பம் சரித்தல் இடம்பெறும். ஆலயங்களில் சூரசங்காரம், மானம்பூ திருவிழா, வாழை வெட்டு போன்றன இடம்பெறும்.
நவராத்திரி விரதத்தை மேற்கொள்வதால் இலட்சுமி கடாட்சம் பெருகும்.கல்வி செல்வம் பெருகும்.மனம் தூய்மை அடையும்.
                                        பூத்தவளே புவனம் பதின்நான்கையும் காப்பாள்.
                                                                                                                                                                                                                                                                                                                                                                        

Keine Kommentare:

Kommentar veröffentlichen