யாழ்ப்பாணத்துச்
சுன்னாகம் அ.வரதபண்டிதர் அவர்கள் இயற்றிய
பிள்ளையார் கதை 1 -
401
சிறப்புப் பாயிரம்
சிறப்புப் பாயிரம்
செந்தமிழ் முனிவன்
செப்பிய காதையுங்
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தோறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.
கந்த புராணக் கதையில் உள் ளதுவும்
இலிங்க புராணத்து இருந்தநற் கதையும்
உபதேச காண்டத்து உரைத்தநற் கதையும்
தேர்ந்தெடுத்து ஒன்றாய்த் திரட்டிஐங் கரற்கு
வாய்ந்தநல் விரத மான்மியம் உரைத்தான்
கன்னியங் கமுகிற் கயலினங் குதிக்குந்
துன்னிய வளவயற் சுன்னா கத்தோன்
அரங்க நாதன் அளித்தருள் புதல்வன்
திரம்பெறு முருகனைத் தினந்தோறும்
வரம்பெற வணங்கும் வரதபண் டிதனே.
காப்பு
கரும்பு மி்ளநீருங்
காரெள்ளுந் தேனும்
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு.
விரும்பும் அவல்பலவும் மேன்மேல் - அருந்திக்
குணமுடைய னாய்வந்து குற்றங்கள் தீர்க்குங்
கணபதியே இக்கதைக்குக் காப்பு.
திருவிளங்கு
மான்மருகா சேவதனில் ஏறி
வரும் அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
கொண்டக்கால் வாராது கூற்று.
சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் தெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
கதை
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துதவழ் சோலை இராசமா நகரியில்
வரும் அரன்றான் ஈன்றருளும் மைந்தா - முருகனுக்கு
முன்பிறந்த யானை முகவா உனைத் தொழுவேன்
என்கதைக்கு நீயென்றுங் காப்பு.
விநாயகர் துதி
திருவாக்குஞ் செய்கருமங் கைகூட்டுஞ் செஞ்சொற்
பெருவாக்கும் பீடும் பெருக்கும் - உருவாக்கும்
ஆதலால் வானோரு மானை முகத்தோனைக்
காதலாற் கூப்புவர்தங் கை.
ஒற்றை யணிமருப்பும் ஓரிரண்டு கைத்தலமும்
வெற்றி புனைந்த விழிமூன்றும் - பெற்றதொரு
தண்டைக்கால் வாரணத்தைத் தன்மனத்தில் எப்பொமுதும்
கொண்டக்கால் வாராது கூற்று.
சப்பாணி
எள்ளு பொரிதேன் அவல்அப்பமிக்கும் பயறும் இளநீரும்
வள்ளிக் கிழங்கும் மாம்பழமும் வாழைப்பழமும் பலாப்பழமும்
வெள்ளைப்பாலும் மோதகமும் விரும்பிப்படைத்தேன் சந்நிதியில்
கொள்ளைக் கருணைக் கணபதியேகொட்டி அருள்க சப்பாணி.
சண்டப் பெருச்சாளி ஏறிச் சடைகொண்டு வையத் துலாவி
அண்டத்து அமரர் துதிக்க அடியார்க்கு அருளும் பிரானே
எண்திக்கும் அன்பர்கள் பார்க்க இணையற்ற பேரொளி வீசக்
குண்டைக் கணபதி நம்பி கொடுங்கையாற் சப்பாணி கொட்டே.
சரஸ்வதி துதி
புத்தகத் துள்ளுறை மாதே பூவில் அமர்ந்திடு வாழ்வே
வித்தகப் பெண்பிள்ளாய் நங்காய் வேதப் பொருளுக்கு இறைவி
முத்தின் குடைஉடை யாளே மூவுல குந்தொழுது ஏத்துஞ்
செப்புக் கவித்த முலையாய் செவ்வரி ஓடிய கண்ணாய்
தக்கோலந் தின்னும் வாயாய் சரஸ்வதி என்னுந் திருவே
எக்காலமும் உன்னைத் தொழுவேன் இயல்/இசை நாடகம் என்னும்
முத்தமிழ்க் கல்விகள் எல்லாம் முழுதும் எனக்கருள் செய்துஎன்
சித்தந் தனில்நீ இருந்து திருவருள் செய்திடுவாயே.
அதிகாரம்
பொன்னிறங் கடுக்கும் புனற்செறி குடுமித்
தென்மலை யிருந்த சீர்சால் முனிவன்
கந்த மும்மதக் கரிமுகன் கதைதனைச்
செந்தமிழ் வகையாற் தெளிவுறச் செப்பினன்
அன்னதிற் பிறவினில் அரில்தபத் திரட்டித்
தொன்னெறி விளங்கச் சொல்லுவன் கதையே.
கதை
மந்தர கிரியில் வடபால் ஆங்கு ஓர்
இந்துதவழ் சோலை இராசமா நகரியில்
அந்தணன் ஒருவனும்
ஆயிழை ஒருத்தியுஞ்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டிக்
கடவுள் ஆலயமுங்
கடிமலர்ப் பொய்கையும்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
தடநிழற் பள்ளியுந் தாம்பல சமைத்துப்
புதல்வரைத்
தருகெனப் பொருப்புஅரசு ஈன்ற
மதர்விழி பாகனை வழிபடு நாளில்
மதர்விழி பாகனை வழிபடு நாளில்
மற்றவர் புரியும்
மாதவங் கண்டு
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் 10
சிற்றிடை உமையாள் சிவனடி வணங்கிப் 10
பரனே சிவனே
பல்லுயிர்க்கு உயிரே
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அரனே மறையவற்கு அருள்புரிந்து அருளென
அந்தஅந் தணனுக்கு
இந்தநற் பிறப்பில்
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
மைந்தரில்லை யென்று மறுத்து அரன் உரைப்ப
எப்பரிசு ஆயினும்
எம்பொருட்டு ஒருசுதன்
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
தப்பிலா மறையோன் தனக்கு அருள் செய்கென
எமையா ளுடைய
உமையாள் மொழிய
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
இமையா முக்கண் இறைவன் வெகுண்டு
பெண்சொற் கேட்டல்
பேதைமை என்று
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் 20
பண்சொற் பயிலும் பாவையை நோக்கிப் 20
பேதாய் நீபோய்ப்
பிறவென மொழிய
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப்
மாதுமை அவளும் மனந்தளர்வு உற்றுப்
பொன்றிடும்
மானுடைப் புன்பிறப்பு எய்துதல்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
நன்றல என்றே நடுக்கமுற்று உரைப்பக்
கறைமிடற்று அண்ணல்
கருணை கூர்ந்து
பிறைநுதல் அவற்குநீ பிள்ளை யாகச்
பிறைநுதல் அவற்குநீ பிள்ளை யாகச்
சென்று அவண்
வளர்ந்து சிலபகல் கழித்தால்
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை யென்று
மன்றல் செய்து அருள்வோம் வருந்தலை யென்று
விடைகொடுத்து அருள
விலங்கன்மா மகளும்
பெடை மயிற் சாயற் பெண்மகவு ஆகித் 30
பெடை மயிற் சாயற் பெண்மகவு ஆகித் 30
தார்மலி மார்பன்
சதுர்மறைக் கிழவன்
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
சீர்மலி மனைவி திருவயிற்று உதித்துப்
பாவையுஞ்
சிற்றிலும் பந்தொடு கழங்கும்
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி
யாவையும் பயின்ற இயல்பினள் ஆகி
ஐயாண்டு அடைந்தபின்
அன்னையும் அத்தனும்
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை
மையார் கருங்குழல் வாணுதல் தன்னை
மானுட மறையோற்கு
வதுவை செய்திடக்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
கானமர் குழலியைக் கருதிக் கேட்பப்
பிறப்புஇறப்பு இல்லாப்
பெரியோற்கு அன்றி
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40
அறத்தகு வதுவைக்கு அமையேன் யான் என 40
மற்றவன் தன்னைஉன்
மணமக னாகப்
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
பெற்றிடல் அரிதெனப் பெயர்த்து அவர் பேச
அருந்தவ
முயற்சியால் அணுகுவேன் யானெனக்
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
கருந்தட நெடுங்கண் கவுரி அங்கு உரைத்து
மருமலி கமல
மலர்த்தடத்து அருகில்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
தருமலி நிழல் தவச் சாலையது அமைத்துப்
பணியணி பற்பல
பாங்கியர் சூழ
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் புரிதலும்
அணிமலர்க் குழல் உமை அருந்தவம் புரிதலும்
அரிவைதன் அருந்தவம்
அறிவோம் யாமென
இருவரு மறியா இமையவர் பெருமான் 50
இருவரு மறியா இமையவர் பெருமான் 50
மான் இடம் ஏந்தும்
வண்ணமது ஒழிந்து
மானிட யோக மறையவன் ஆகிக்
மானிட யோக மறையவன் ஆகிக்
குடையொடு தண்டுநற்
குண்டிகை கொண்டு
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
மடமயில் தவம்புரி வாவிக் கரையில்
கண்ணுதல் வந்து
கருணை காட்டித்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
தண்நறும் கூந்தல் தையலை நோக்கி
மின்பெறு நுண்ணிடை மெல்லிய லாய்நீ
என்பெறத் தவமிங்கு இயற்றுவது என்றலும்
கொன்றை
வார்சடையனைக் கூடஎன்று உரைத்தலும்
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60
நன்று எனச் சிரித்து நான்மறை யோனும் 60
மாட்டினில் ஏறி
மான்மழுத் தரித்துக்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
காட்டினிற் சுடலையிற் கணத்துடன் ஆடிப்
பாம்பும் எலும்பும்
பல்தலை மாலையுஞ்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
சாம்பரும் அணிந்து தலையோடு ஏந்திப்
பிச்சைகொண்டு
உழலும் பித்தன் தன்னை
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்
நச்சிநீ செய்தவம் நகைதரும் நுமக்கெனப்
பூங்கொடி அருந்தவம்
பூசுரன் குலைத்தலும்
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70
ஆங்குஅவள் நாணமுற்று அணிமனை புகுதச்
சேடியர் வந்து செழுமலர் குழலியை
வாடுதல் ஒழிகென மனமிகத் தேற்றிச் 70
சிந்துர வாள்நுதற்
சேடியர் தாம்போய்த்
தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி
தந்தைதாய் இருவர் தாளினை வணங்கி
வாவிக் கரையில்
வந்தொரு மறையோன்
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன
பாவைதன் செங்கையைப் பற்றினான் என்றலுந்
தோடு அலர்கமலத் தொடைமறை முனியை
ஆடக மாடத்து அணிமனை கொணர்கஎன
மாடக யாழ்முரல்
மங்கையர் ஓடி
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என
நீடிய புகழாய் நீஎழுந்து அருள் என
மைம்மலர்க் குழலி
வந்துஎனை அழைக்கில்
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80
அம்மனைப் புகுவன் என்று அந்தணன் உரைத்தலும் 80
பொற்றொடி நீபோய்ப்
பொய்கையில் நின்ற
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
நற்றவ முனியை நடாத்திக் கொணர்கெனச்
சிவனை இகழ்ந்த
சிற்றறி வுடையோன்
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
அவனையான் சென்றிங்கு அழைத்திடேன் என்று
சிற்றிடை
மடந்தையுஞ் சீறினள் ஆகி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
மற்றைய மாதர் மதிமுகம் நோக்கி
நெற்றியிற் கண்ணுடை
நிமலனுக்கு அல்லவென்
பொற்அமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
பொற்அமர் கொங்கை பொருந்துதற்கு அரிதால்
மானிட வேட மறையவன்
தனக்கு
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப 90
யான்வெளிப் படுவ தில்லையென்று இசைப்ப 90
மலையிடை வந்த
மாமுனி தன்னை
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
இணையடி தொழுதல் இளையோர்க்கு இயல்பெனத்
தந்தையுந் தாயுந்
தகைபெற மொழியச்
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
சிந்தை குளிர்ந்து சீறுதல் ஒழிந்து
தாய்சொல் மறுத்தல்
பாவமென்று அஞ்சி
ஆயிழை தானும் அவனெதிர் சென்று
ஆயிழை தானும் அவனெதிர் சென்று
சுற்றிவந்து அவனடி சுந்தரி
வணங்கி
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
மற்றவன் தன்னை மனையிற் கொணர்ந்து
ஆதியம் பகவற்கு
அன்பன் ஆகும்
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி 100
வேதியன் பழைய விருத்தன் என்றெண்ணி 100
ஆசனம் நல்கி
அருக்கியம் முதலாப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
பாத பூசனைகள் பண்ணிய பின்னர்ப்
போனகம் படைத்துப்
பொரிக்கறி பருப்புநெய்
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
ஆன்பால் மாங்கனி அழகிய பலாச்சுளை
தேன்கத லிப்பழஞ்
சீர்பெறப் படைத்து
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்
அந்தணன் தன்னை அமுதுசெய் வித்துச்
சந்தனங் குங்குமச்
சாந்துஇவை கொடுத்துத்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்
தக்கோ லத்தொடு சாதிக் காயும்
கற்பூ ரத்தொடு
கவின்பெறக் கொண்டு
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 110
வெள்ளிலை அடைக்காய் விளங்கிய பொன்னின் 110
ஒள்ளிய தட்டில்
உகந்து முன்வைத்துச்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுகம் நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
சிவனெனப் பாவனை செய்து நினைந்து
தவமறை முனிவனைத் தாளினை வணங்கத்
தேனமர் குழலி திருமுகம் நோக்கி
மோனமா முனிபுன் முறுவல் காட்டிக்
கற்றைச் சடையுங் கரமொரு நான்கும்
நெற்றியில் நயனமும்
நீல கண்டமும்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
மானும் மழுவும் மலர்க்கரத்து இலங்கக்
கூன்மதி நிலவுங்
கொழித்திட முடிமேல்
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120
வரந்தரு முதல்வன் மடமயில் காணக் 120
கரந்ததன் உருவங்
காட்டி முன்நிற்ப
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
மரகத மேனி மலைமகள் தானும்
விரைவொடுஅங்கு அவன் அடி வீழ்ந்துஇறைஞ் சினளே
அரிஅயன் இந்திரன் அமரர் விஞ்சையர்
கருடர் கின்னரர்
காய வாசியர்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்
ஏதமில் முனிவர் அவுணர் இராக்கதர்
பூதர் இயக்கர்கிம் புருடர் அலகை
சித்தர் தாரகைகந் தருவர்கள் முதலாய்க்
கணிக்கரும் பதினெண்
கணத்தில் உள்ளவரும்
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் 130
மணிக்கருங் களத்தனை வந்தடைந்து அதன்பின் 130
மன்றல் அங்
குழலிக்கு வதுவைநாள் குறித்துத்
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி
தென்றல் வந்துஇலங்கு முன்றில் அகத்துப்
பொன்திகழ் பவளப் பொற்கால் நாட்டி
மாணிக் கத்தால் வளைபல பரப்பி
ஆணிப்பொன் தகட்டால்
அழகுற வேய்ந்து
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்
நித்தில மாலை நிரைநிரை தூக்கிப்
பக்திகள் தோறும் பலமணி பதித்துத்
தோரணம் நாட்டித் துகில்விதா னித்துப்
பூரணப் பொற்குடம்
பொலிவுற வைத்துத்
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் 140
திக்குத் தோறும் திருவிளக் கேற்றிப் 140
பத்திப் படர்முளைப்
பாலிகை பரப்பிக்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
கன்னலுங் கழுகுங் கதலியும் நாட்டிப்
பன்மலர் நாற்றிப்
பந்தர் சோடித்து
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
நலமிகு கைவலோர் நஞ்சணி மிடற்றனைக்
குலவிய திருமணக்
கோலம் புனைந்தார்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
வருசுரர் மகளிர் மலைமகள் தன்னைத்
திருமணக் கோலஞ்
செய்தன ஆங்கே
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்
எம்பி ரானையும் இளங்கொடி தன்னையும்
உம்பர் எல்லாம்
ஒருங்குடன் கூடிக்
கடலென விளங்கும் காவணந் தன்னில் 150
கடலென விளங்கும் காவணந் தன்னில் 150
சிவன், உமை
திருக்கல்யாணமும், விநாயகர் அவதாரமும்
சுடர்விடு பவளச்
சுந்தரப் பலகையி்ல்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
மறைபுகழ்ந்து ஏத்த மகிழ்ந்து உடன் இருத்திப்
பறையொலி யோடு
பனிவளை ஆர்ப்ப
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
வதுவைக்கு ஏற்ற மறைவிதி நெறியே
சதுர்முகன் ஓமச்
சடங்குகள் இயற்றத்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
தறுகலன் ஒளிபொன் தாலி பூட்டிச்
சிறுமதி நுதலியைச்
சிவன்கைப் பிடித்தபின்
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
அரிவலஞ் சூழ எரிவலம் வந்து
பரிவுடன் பரிமளப்
பாயலில் வைகிப்
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே 160
போதுஅணி கருங்குழற் பூவை தன்னுடனே 160
ஓதநீர் வேலிசூழ் உஞ்சையம்
பதிபுக
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
ஏரார் வழியில் எண்திசை தன்னைப்
பாரா தேவா பனிமொழி
நீயென
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்
வருங்கருங் குழலாள் மற்றும் உண் டோவெனத்
திருந்துஇழை மடந்தை
திரும்பினாள் பார்க்கக்
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு
களிறும் பிடியுங் கலந்துவிளை யாடல்கண்டு
ஒளிர்மணிப்பூணாள்
உரவோ னுடனே
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென
இவ்வகை யாய்விளை யாடுவோம் ஈங்கென
அவ்வகை அரனும்
அதற்கு உடன் பட்டு
மதகரி யுரித்தோன் மதகரி யாக 170
மதகரி யுரித்தோன் மதகரி யாக 170
மதர்விழி உமைபிடி
வடிவம் அதாகிக்
கூடிய கலவியில் குவலயம் விளங்க
கூடிய கலவியில் குவலயம் விளங்க
நீடிய வானோர்
நெறியுடன் வாழ
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
அந்தணர் சிறக்க ஆனினம் பெருகச்
செந்தழல் வேள்விவேத
ஆகமம் சிறக்க
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
அறம்பல பெருக மறம்பல சுருங்கத்
திறம்பல அரசர்
செகதலம் விளங்க
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
வெங்கரி முகமும் வியன்புழைக்கையோடு
ஐங்கர தலமு
மலர்ப்பதம் இரண்டும்
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் 180
பவளத்து ஒளிசேர் பைந் துவர்வாயுந் 180
தவளக் கிம்புரித்
தடமருப்பு இரண்டும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
கோடி சூரியர்போற் குலவிடு மேனியும்
பேழைபோல் அகன்ற
பெருங்குட வயிறும்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்
நெற்றியில் நயனமும் முப்புரி நூலுங்
கற்றைச் சடையுங்
கனகநீண் முடியுந்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
தங்கிய முறம்போல் தழைமடிச் செவியுமாய்
ஐங்கரத்து அண்ணல்
வந்துஅவ தரித்தலும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
பொங்கரவு அணிந்த புண்ணிய மூர்த்தியும்
மங்கை மனமிக
மகிழ்ந்து உடன் நோக்கி
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190
விண்ணு ளோர்களும் விரிந்த நான் முகனும் 190
மண்ணு ளோர்களும்
வந்துஉனை வணங்க
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்
ஆங்குஅவர் தங்கட்கு அருள் சுரந்துஅருளித்
தீங்கது தீர்த்துச்
செந்நெறி அளித்துப்
பாரண மாகப் பலகனி யருந்தி
பாரண மாகப் பலகனி யருந்தி
ஏரணி ஆலின்கீழ்
இனிதுஇரு என்று
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
பூதலந் தன்னிற் புதல்வனை யிருத்திக்
காதல்கூர் மடநடைக்
கன்னியுந் தானும்
மைவளர் சோலை மாநகர் புகுந்து
மைவளர் சோலை மாநகர் புகுந்து
தெய்வ நாயகன்
சிறந்துஇனிது இருந்தபின்
வான வராலும் மானு டராலும் 200
வான வராலும் மானு டராலும் 200
ஆவணி விநாயகர் சதுர்த்தி விரதமுறை
கானமர் கொடிய கடுவி
லங்காலுங்
கருவி களாலுங் கால னாலும்
கருவி களாலுங் கால னாலும்
ஒருவகை யாலும் உயிர
ழியாமல்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
திரம்பெற மாதவஞ் செய்து முன்னாளில்
வரம் பெறுகின்ற
வலிமை யினாலே
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்
ஐம்முகச் சீயம்ஒத்து அடற்படை சூழக்
கைம்முகம் படைத்த
கயமுகத்து அவுணன்
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
பொன்னுலகு அழித்துப் புலவரை வருத்தி
இந்நிலத் தவரை
இடுக்கண் படுத்திக்
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி 210
கொடுந்தொழில் புரியுங் கொடுமைகண்டு ஏங்கி 210
அடுந்தொழிற்
குலிசத்து அண்ணலும் அமரருங்
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
கறைபடு கண்டக் கடவுளைப் போற்றி
முறையிடக் கேட்டு
முப்புரம் எரித்தோன்
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சலீர் என்றுஅவர்க்கு அபயங் கொடுத்தே
அஞ்சுகைக்
கரிமுகத்து அண்ணலை நோக்கி
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்
ஆனைமா முகத்து அவுணனோடு அவன்தன்
சேனைகள் முழுவதுஞ்
சிந்திடப் பொருது
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
குன்றுபோல் வளர்ந்த குறட்படை கூட்டி
வென்றுவா வென்று
விடைகொ டுத்தருள
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் 220
ஆங்குஅவன் தன்னோடு அமர்பல உடற்றிப் 220
பாங்குறும் அவன்படை
பற்று அறக் கொன்றபின்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
தேர்மிசை ஏறிச் சினங்கொடு செருவிற்
கார்முகம் வளைத்த
கயமுகா சுரன்மேல்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
ஒற்றைவெண் மருப்பை ஒடித்து அவன் உரத்திற்
குற்றிட எறிந்தான்
குருதிசோர்ந் திடவே
சோர்ந்து அவன்வீழ்ந்து துண்ணென எழுந்து
சோர்ந்து அவன்வீழ்ந்து துண்ணென எழுந்து
வாய்ந்த மூடிகமாய்
வந்துஅவன் பொரவே
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
வந்த மூடிகத்தை வாகனம் ஆக்கி
எந்தை விநாயகன்
ஏறினன் இப்பால்
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் 230
எறிந்த வெண்மருப்புஅங்கு இமைநொடி அளவில் 230
செறிந்தது மற்றவன்
திருக்கரத் தினிலே
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வெல்லவைக் கதிர்வேல் விழிபடைத்து அருளும்
வல்லவை தனைத்தன்
மனைஎன மணந்தே
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ
ஒகையோடு எழுந்துஆங்குஉயர்படை சூழ
வாகையும் புனைந்து
வரும்வழி தன்னிற்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்
கருச்சங் கோட்டிக் கயல்கமுகு ஏறும்
திருச்செங்
காட்டிற் சிவனை அர்ச்சித்துக்
கணபதீச் சரம் எனுங் காரண நாமம்
கணபதீச் சரம் எனுங் காரண நாமம்
கணபதி புகழ்தரு
பதிக்குஉண் டாக்கிச்
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 240
சங்கரன் பார்ப்பதி தனிமன மகிழ 240
இங்குவந்து
அன்புடன் எய்திய பின்னர்க்
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
கணங்களுக்கு அரசாய்க் கதிர்முடி சூட்டி
இணங்கிய
பெருமைபெற்றுஇருந்திட ஆங்கே
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
தேவர்கள் முனிவர் சித்தர் கந்தருவர்
யாவரும் வந்துஇவண்
ஏவல் செய்திடுநாள்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
அதிகமாய் உரைக்கும் ஆவணித் திங்களின்
மதிவளர் பக்கம்
வந்திடு சதுர்த்தியில்
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
விநாயகற் குரிய விரதமென்று என்றெண்ணி
மனாதிகள் களித்து
மரபொடு நோற்றார்
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள் 250
இப்படி நோற்றிட்டு எண்ணிய பெருநாள் 250
ஒப்பரும் விரதத்து உறும்ஒரு
சதுர்த்தியில்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
நோற்று நற்பூசை நுடங்காது ஆற்றிப்
போற்றி
செய்திட்டார் புலவர் ஐங்கரனை
மருமலர் தூவும் வானவர் முன்னே
மருமலர் தூவும் வானவர் முன்னே
நிருமலன் குமரன்
நிருத்தம் புரிந்தான்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
அனைவருங் கைதொழுது அடிஇணை போற்ற
வனைகழற் சந்திரன் மனச்செருக்கு அதனால்
பேழைபோல் வயிறும் பெருத்த காத்திரமும்
தாழ்துளைக் கையும்
தழைமுறச் செவியுங்
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 260
கண்டனன் நகைத்தான் கரிமுகக் கடவுளுங் 260
கொண்டனன் சீற்றம்
குபேரனை நோக்கி
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
என்னைக் கண்டுஇங்கு இகழ்ந்தனை சிரித்தாய்
உன்னைக் கண்டவர்
உரைக்கும் இத்தினத்திற்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
பழியொடு பாவமும் பலபல விதனமும்
அழிவும் எய்துவர்
என்று அசனிபோற் சபித்தான்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்
விண்ணவ ரெல்லாம் மிகமனம் வெருவிக்
கண்ணருள் கூருங்
கடவுள் இத் தினத்திற்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
கோரவெஞ் சினமிகக் கொண்டனன் அந்நாள்
மார்கழித் திங்கள்
மதிவளர் பக்கஞ்
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று 270
சதயந் தொட்ட சட்டிநல் விரதமென்று 270
இதயத்து எண்ணி
யாவரும் நோற்றார்.
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
இப்புவி மாந்தர் இயம்பிய விரதம்
வைப்புடன் நோற்ற
வகைஇனிச் சொல்வாம்
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
குருமணி முடிபுனை குருகுலத்து உதித்த
தருமனும் இளைய
தம்பியர் நால்வரும்
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி
தேவகி மைந்தன் திருமுகம் நோக்கி
எண்ணிய விரதம்
இடையூறு இன்றிப்
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ்
பண்ணிய பொழுதே பலிப்பு உண்டாகவுஞ்
செருவினில்
எதிர்ந்த செறுநரை வென்று
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280
மருமலர்ப் புயத்தில் வாகை சூடவும் 280
எந்தத் தெய்வம்
எவ்விர தத்தை
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
வந்தனை செய்யில் வருநமக்கு உரையெனப்
பாட்டுஅளி துதையும்
பசுந்துழாய் மார்பனுங்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துதல் உற்றான்
கேட்டருள் வீர் எனக் கிளர்த்துதல் உற்றான்
அக்கு நீறணியும்
அரன்முதல் அளித்தோன்
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
விக்கினந் தீர்க்கும் விநாயக மூர்த்தி
ஓடவைத் திடும்பொன்
ஒத்துஒளி விளங்குங்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கோடி சூரியர்போற் குலவிய மேனியன்
கடகரி முகத்தோன்
காத்திரம் பெருத்தோன்
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் 290
தடவரை போலுஞ் சதுர்ப்புய முடையோன் 290
சர்வ ஆபரணமுந்
தரிக்கப் பெற்றவன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
உறுமதிக் குழவிபோ லொருமருப் புடையோன்
ஒருகையில் தந்தமும்
ஒருகையிற் பாசமும்
ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
ஒருகையில் மோதகம் ஒருகையிற் செபஞ்செய்
உத்தம மாலையோன்
உறுநினை வின்படி
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
சித்தி செய்வதனாற் சித்தி விநாயகன்
என்றுஇமை யவரும்
யாவருந் துதிப்ப
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
நன்றி தரும்திரு நாமம் படைத்தோன்
புரவலர்க் காணப்
புறப்படும் போதுஞ்
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300
செருவினில் யுத்தஞ் செய்திடும் போதும் 300
வித்தி யாரம்பம்
விரும்பிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
உத்தி யோகங்கள் உஞற்றிடும் போதும்
ஆங்கவன் தன்னை அருச்சனை
புரிந்தால்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண்டாகும்
தீங்குஉறாது எல்லாஞ் செயம் உண்டாகும்
கரதலம் ஐந்துக்
கணபதிக்கு உரிய
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
விரதமொன்று உளதை விரும்பி நோற்றவர்க்குச்
சந்ததி தழைத்திடுஞ்
சம்பது உண்டாம்
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு 310
புந்தியில் நினைந்த பொருள்கை கூடும்
மேலவர் தமையும் வென்றிட லாமெனத்
தேவகி மைந்தன் செப்பிடக் கேட்டு 310
நுவலரும் விரதம்
நோற்றிடு மியல்பும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
புகர்முகக் கடவுளைப் பூசை செய்விதமும்
விரித்து எமக்கு
உரைத்திட வேண்டுமென்று இரப்ப
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
வரைக்குடை கவித்தோன் வகுத்துரை செய்வான்
தேருநீர் ஆவணித்
திங்களின் மதிவளர்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
பூர்வ பக்கம் புணர்ந்திடு சதுர்த்தியின்
முந்தும் புலரியின்
முறைநீர் படிந்து
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320
சந்தி வந்தனந் தவறாது இயற்றி
அத்தினம் அதனில் ஐங்கரக் கடவுளைப்
பத்தியோடு அர்ச்சனை பண்ணுதல் வேண்டும் 320
வெள்ளியாற்
பொன்னால் விளங்கும் அவன்தன்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
ஒள்ளிய அருள்திரு உருவுண் டாக்கிப்
பூசனை புரியப் புகன்றனர் பெரியோர்
ஆசுஇலா மண்ணால் அமைத்தலுந் தகுமால்
பூசைசெய் திடும்இடம்
புனிதமது ஆக்கி
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி 330
வாசமென் மலரின் மஞ்சரி தூக்கிக்
கோடிகம் கோசிகம் கொடிவிதா னித்து
நீடிய நூல்வளை நிறைகுடத்து இருத்தி
விந்தைசேர் சித்தி விநாயகன் உருவைச்
சிந்தையில் நினைந்து தியானம் பண்ணி 330
ஆவா கனம் முதல்
அர்க்கிய பாத்தியம்
வாகார் ஆச மனம்வரை கொடுத்து
வாகார் ஆச மனம்வரை கொடுத்து
ஐந்துஅமிர் தத்தால்
அபிடே கித்துக்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
கந்தம் சாத்திக் கணேச மந்திரத்தால்
ஈசுர புத்திரன்
என்னும் மந்திரத்தால்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
மாசுஅகல் இரண்டு வத்திரஞ் சாத்திப்
பொருந்துஉமை
சுதனாப் புகலுமந் திரத்தால்
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே 340
திருந்தும் பளிதத் தீபங் கொடுத்துப்
பச்சறுகு உடன் இரு பத்தொரு விதமாப்
பத்திர புட்பம் பலபல கொணர்ந்தே 340
உமாசுதன் கணாதிபன்
உயர்கரி முகத்தோன்
குமார குரவன் பாசாங் குசகரன்
குமார குரவன் பாசாங் குசகரன்
ஏக தந்தன் ஈசுரன்
புத்திரன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
ஆகு வாகனன் அருள்தரு விநாயகன்
சர்வ காரியமுந்
தந்தருள் புரிவோன்
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால்
ஏரம்ப மூர்த்தி என்னும் நாமங்களால்
ஆரம் பத்துடன்
அர்ச்சனை பண்ணி
மோதகம் அப்பம் முதற்பணி காரந்
மோதகம் அப்பம் முதற்பணி காரந்
தீதகல் மாங்கனி
தீங்கத லிப்பழம்
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 350
வருக்கை கபித்த மாதுளங் கனியொடு 350
தரித்திடு
நெட்டிலைத் தாழைமுப் புடைக்காய்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
பருப்புநெய் பொரிக்கறி பால்தயிர் போனகம்
விருப்புள
சுவைப்பொருள் மிகவும் முன்வைத்து
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்
உருத்திரப் பிரியஎன்று உரைக்கும் மந்திரத்தால்
நிருந்தன் மகற்கு
நிவேதனங் கொடுத்து
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்
நற்றவர் புகன்ற நா னான்குஉப சாரமும்
மற்றவன் திருவுளம்
மகிழ்ந்திடச் செய்து
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
எண்ணுந் தகுதி இருபிறப் பாளர்க்கு
உண்அறு சுவைசேர்
ஓதனம் நல்கிச்
சந்தன முத்துத் தானந் தக்கிணை 360
சந்தன முத்துத் தானந் தக்கிணை 360
அந்தணர்க்கு
ஈந்திட்டு அருச்சகன் தனக்குத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
திருத்தகும் விநாயகத் திருவுரு வத்தைத்
தரித்த வத்
திரத்துடன் தானமாக் கொடுத்து
நைமித் திகம் என நவில்தரு மரபால்
நைமித் திகம் என நவில்தரு மரபால்
இம்முறை பூசனை
யாவர் செய்தாலும்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
எண்ணிய கருமம் யாவையு முடிப்பர்
திண்ணிய செருவிற்
செயம்மிகப் பெறுவர்
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி 370
அரன் இவன் தன்னைமுன் அர்ச்சனை பண்ணிப்
புரமொரு மூன்றும் பொடிபட எரித்தான்
உருத்திரன் இவனை உபாசனை பண்ணி 370
விருத் திராசுரனை
வென்றுகொன் றிட்டான்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
அகலிகை இவன்தாள் அர்ச்சனை பண்ணிப்
பகர்தருங் கணவனைப்
பரிவுட னடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
தண்ணார் மதிமுகத் தாள் தமயந்தி
அன்னான் இவனை அர்ச்சனை பண்ணி
நண்ணார் பரவு நளனை அடைந்தாள்
ஐங்கரக் கடவுளை
அர்ச்சனை பண்ணி
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
வெங்கத நிருதரை வேரறக் களைந்து
தசரதன் மைந்தன்
சீதையை யடைந்தான்
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை 380
பகிரத னென்னும் பார்த்திவன் இவனை 380
மதிதலந் தன்னின்
மலர்கொடு அர்ச்சித்து
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
வரநதி தன்னை வையகத்து அழைத்தான்
அட்ட தேவதைகளும்
அர்ச்சித்து இவனை
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
அட்ட போகத்துடன் அமிர்தமும் பெற்றார்
உருக்மணி யென்னும் ஒண்டொடி தன்னைச்
செருக்கொடு வவ்விச்
சிசுபா லன்தான்
கொண்டு போம் அளவிற்
குஞ்சர முகனை
வண்டுபாண் மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
வண்டுபாண் மிழற்றா மலர்கொடு அர்ச்சித்துத்
தாரியின் மறித்தவன்
தனைப்புறங் கண்டு
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 390
யாமும் அங்கு அவளை இன்புறப் பெற்றோம் 390
புகர்முகக்
கடவுளைப் பூசனை புரிந்து
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
மிகமிக மனத்தில் விளைந்தன பெற்றார்
இப்புவி தன்னில் எண்ணுதற்கு
அரிதால்
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால்
அப்படி நீவிரும் அவனை அர்ச்சித்தால்
எப்பொருள்
விரும்பினீர் அப்பொருள் பெறுவீர்
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப
என்றுகன்று எறிந்தோன் எடுத்திவை உரைப்ப
அன்றுமுதல்
தருமனும் அனுசரும் இவனைப்
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
பூசனை புரிந்து கட் புலன் இலான் மைந்தரை
நாசனம் பண்ணி
நராதிபர் ஆகிச்
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு 400
சிந்தையில் நினைத்தவை செகத்தினிற் செயங்கொண்டு 400
அந்தமில் செல்வத்து அரசியல் பெற்றார் 401
Keine Kommentare:
Kommentar veröffentlichen