“தீபம்” என்பது விளக்கு. “ஆவளி” என்பது வரிசை.தீபங்களை வரிசையாக ஏற்றி கொண்டாடப்படுவதால் இப்பண்டிகையை தீபாவளி என அழைக்கப்படுகின்றது.இது ஐப்பசிமாதத்து கிருஷ்ணபட்ஷ சதுர்த்தசி திதியில் கொண்டாடப்படுகிறது. இதனை நரக சதுர்த்தசி என்று கூறுவார்.
தீபாவளி
திருநாள் என்பது தாய் (பூமாதேவியின் அம்சமான சத்யபாமா) தன் மகனான கொடிய
நரகாசுரனை
வதம் செய்த தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இரண்யாட்சன்
என்ற அரக்கன் வேதங்களை எடுத்துச் சென்று மறைத்து வைத்துவிட்டனர். அதனை மீட்டெடுக்க
மகாவிஷ்ணு பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு அவனை வென்றார்.அப்போது
பூமாதேவியுடன் ஏற்பட்ட பரிசத்தினால் பூமாதேவி
பவுமன் என்ற மகனைப் பெற்றெடுத்தார்கள். அந்த பவுமன் சாகாவரம் வேண்டி பிரம்மதேவரை
நோக்கி கடும் தவம் செய்து பிரம்மதேவரிடம் பெற்ற தாயைத் தவிர வேறு ஒருவரால் மரணம்
ஏற்படாது என வரம் பெற்றான்.
பிற்காலத்தில் நரகர் எனப்படும்
மனிதர்களிற்கு எதிராக கொடுமைகள் செய்த அசுரன் என்பதால் அவன் நரகாசுரன் என
அழைக்கப்பட்டான். மகாவிஷ்ணுவின் கிருஷ்ணாவதாரத்தில் பூமாதேவி சத்யபாமாவாக
அவதரித்து கிருஷ்ணரை மணந்து கொண்டார். மனித அவதாரத்தில் சத்யபாமாவிற்கு நரகாசுரன்
தனது மகன் என்ற நினைப்பு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர்
தோரோட்டுவதிலும், விற்போர், வாட்போர் போன்றவற்றில் வல்லவரான சத்தயபாமாவை தனது தேரை ஓட்டும்படி
பணித்தார்.
நரகாசுரன் உடன் நடந்த சண்டையில்
கிருஷ்ணர் காயமடைந்து மயங்கடைந்தது போல நடித்தார். தனது கணவரின் நிலை கண்டு கடும்
கோபம் கொண்ட சத்யபாமா நரகாசுரனை எதிர்த்து போர்செய்து அவனை அழித்தார். அப்போது அவன்
தனது மகன் என அவர் தெரிந்து கொண்டார்.
நரகாசுரன் இறந்ததும் மக்கள் தீபமேற்றி
அதனைக் கொண்டாடுவதை கண்ட சத்யபாமா கிருஷ்ணரிடம் இப்படி ஒரு தீய மகன் தமக்கு
பிறக்கக்கூடாது என மக்கள் நரகாசுரன் இறந்த நாளை தீபமேற்றிக் கொண்டாட வேண்டும்என விரும்பினார்.
நரகாசுரன் என்ற
அசுரன் இறக்கும்போது அஞ்ஞான இருள் நீங்கி ஞானஒளி
பெற்றமையால்,தான் இறந்த தினத்தை பூமியில் உள்ளோர் அனைவரும் மகிழ்வாக
கொண்டாடவேண்டும் எனக் கிருஷ்ணபகவானிடம் வரம் கேட்டான். அவ்வாறே நரகாசுரன் கேட்ட வரத்தினை அளித்து கிருஷ்ணபகவான்
ஆட்கொண்டதால் இப்பண்டிகை நரக சதுர்த்தி என அழைக்கப்படுகிறது.
தீபாவளி
நாளில் எண்ணெய் வைத்து சூரிய உதயத்துக்கு முன்னர் வெந்நீரில் குளியல் செய்வார்கள்.
அன்றைய தினத்தில் ஒவ்வொருவர் வீட்டு தண்ணீரிலும் கங்காதேவியும், எண்ணையில் இலக்குமியும்
எழுந்தருவார் என்பது நம்பிக்கை.
புத்தாடைகள்
புனைந்து ஆலயங்கள் சென்று வழிபாடு செய்து
வருவார்கள். அறுசுவை உணவுகளுடன் பட்சணங்கள் சமைத்து உறவினர்கள், நண்பர்களுடன் கூடி
உண்டு மகிழ்வது இந்துக்களின் மரபாகும்.சிலர் தீபாவளி அன்பளிப்பு கொடுத்து
மகிழ்வார்கள். இதனால் மக்களிடையே ஒற்றுமை உணர்வும் விருந்தோம்பல் பண்பாடும் வளரும்.
தீபங்களின்
ஒளி சிற்சக்தியாகக் கொள்ளப்பட்டு, ஒளியானது இருளை நீக்குவது போல, சிற்சக்தி
ஆன்மாவின் அக இருளை நீக்கி மலத்தை போக்கி ஞானத்தினை
நல்குகின்றது என்ற தத்துவத்தையும் தீபாவளி பண்டிகை குறித்து நிற்கிறது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen