சைவசமயத்தில் பிறந்த அனைவருக்கும் சோதிடம் எனும் கலை இன்றியமையாத நம்பிக்கை வழிகாட்டியாக கணிக்கப்படுகிறது. அதில் நவக்கிரகங்களின் பலனை வைத்தே கணிப்பீடு செய்கிறார்கள். ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை. அவை ராகு,கேது,சனி ஆகும். இவைகளில் சனி என்ற சனீஸ்வர பகவான்தான் முதன்மையானது. சனீஸ்வர பகவானின் பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பர். அதிலும் சனீஸ்வரன் மீதே அதிக வழிபாடு உண்டு. ஏழரைச்சனி, அட்டமத்துசனி, ஜென்மத்துசனி, சனி பார்வை என்பன உள்ள காலங்களில் ஆலயம் சென்று சனிஸ்வரனுக்கு விசேட வழிபாடு செய்வார்கள்.
சனி மூல மந்திரம்:
"ஓம் ஐம் கிலீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ",
சனி காயத்ரி மந்திரம்:
காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
சனி ஸ்தோத்திரம்:
நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்!!
தமிழில்:
சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
Keine Kommentare:
Kommentar veröffentlichen