தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 12. Dezember 2017

முத்தான முத்துக்குமார வா

முத்தான முத்துக்குமரா
முருகையா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா

முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா

நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா

மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
 
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
 
பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து

நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா


Keine Kommentare:

Kommentar veröffentlichen