தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 16. Oktober 2016

கேதாரகௌரி விரதம்



சிவனின் அருள்பெற கேதாரம் என்ற இமயமலையை சார்ந்த வயல் பகுதியில் 21 நாட்கள் விரதம் இருந்தாள் அம்பிகை. அதன் பலனாக ஈஸ்வரனின் உடம்பில் சரிபாதி இடத்தை அம்பிகை பெற்றுக்கொண்டார். கணவனிடம் எந்நாளும் பிரிக்கமுடியாத பந்தம் வேண்டி கௌரியை வழிபடும் விரதம் கேதார கௌரி விரதம் ஆகும். அதனால் இறைவன் அர்த்தநாதீஸ்வரர் ஆனார். 

கைலாய மலையிலே மகாவிஷ்ணு, பிரம்மா, தேவர்கள், முனிவர்கள் சூழ உள்ள சபையில்  சிவன், பார்வதி தேவியோடு வீற்றிருந்தார். பிருங்கி முனிவரின் விகட நடனத்தைக் கண்டுகளித்து சிவனும் அனைவரும்  முனிவரைப் பாராட்டினார்கள். இதனால் மகிழ்வுற்ற பிருங்கி முனிவர் வண்டு உருவம் எடுத்து சிவனை மட்டும் வலம்வந்து வணங்கி நின்றார். பார்வதியை வலம்வராததால் கோபமுற்ற பார்வதி தேவி, தனது சக்தியால் பிருங்கி முனிவரை முடமாக்கினார். அதனால் நிற்கமுடியாத நிலையில் இருந்த  பிருங்கி முனிவருக்கு சிவன்  ஊன்றுகோலை வழங்கி உதவினார். அதனைப் பெற்ற பிருங்கிமுனிவர் மீண்டும் சிவனை வணங்கி அவ்விடம் விட்டு சென்றார்.
இதனால் கோபமடைந்த பார்வதி கைலையமலையை விட்டுத் கௌத முனிவரின் ஆசிரமத்திற்கு சென்றார். அதனால் வறட்சியில் இருந்த அப்பகுதி செழிப்பு அடைந்தது. செழிப்பின் காரணம் அறிந்த கௌத முனிவர் தனது ஆசிரமத்துக்கு வந்த பார்வதியை வரவேற்று, வந்த காரணம் அறிந்து, முனிவர் கேதாஈஸ்வர விரதத்தை அனுஷ்டிக்கும் முறையை விளக்கமாக அம்பிகைக்குக் கூறியருளினார். முனிவரின் கூறியதுபோல் அம்பிகையும் 21 நாட்களும் கடும் தவம் இருந்து சிவனை நினைத்து தவம் இருந்தாள்.
பார்வதி தேவியின் கடும் தவத்தால் சிவபெருமான் உமையவளுக்கு தரிசனம் தந்தார். இறைவனைக் கண்ட பார்வதி, சிவன் உடலில் சரிபாதி பிரியாத வரம் வேண்டி சிவனோடு இணைந்தார். இந்நாளை  கேதார கௌரி விரதம் ஆக அனுஷ்டிக்கப்படுகின்றது.
புரட்டாதி மாதம் சுக்கில பக்ஷ அஷ்டமி முதல்  21நாட்கள் ஐப்பசி அமாவாசையுடன் நிறைவுறும் விரதம் ஆகும். 21 நாளும்  21 முடிச்சுகளை கொண்ட நூலினை பூஜையில் வைத்து, இறுதிநாள் ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டி கொள்வார்கள். உபவாசம் இருந்து விரதத்தை பூர்த்தி செய்வார்கள்.

Keine Kommentare:

Kommentar veröffentlichen