அங்கமும்
வேதமும் ஓதுநாவர்
அந்தணர்
நாளும் அடிபரவ
மங்குல் மதிதவழ் மாடவீதி
மங்குல் மதிதவழ் மாடவீதி
மருகல்
நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங்
காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கங்குல் விளங்கெரி யேந்தியாடும்
கணபதி
யீச்சரங் காமுறவே.
நான்கு வேதங்களையும் ( இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்) ஆறு அங்கங்களையும் (வேதத்தின் ஆறு அங்கங்களாகிய சிட்சை, கற்பம், வியாகரணம், நிருக்தம் , சந்தோபிசிதம், சோதிடம் ) ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.
அந்தமும் ஆதியுந் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங்
குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
நான்முகனும் அரவணையானும் ஆதியாய
முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான
வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே!
செந்தமிழ் வல்லோர் பரவித் துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை
மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.
Keine Kommentare:
Kommentar veröffentlichen