தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 12. Januar 2017

தைப் பொங்கல்

தைப்பொங்கல்
தை மாதம் முதல் ஆனிமாதம் வரை சூரியன் வடக்கு நோக்கி செல்கின்ற காலப்பகுதி உத்தராயணம் எனப்படும். உத்தராயணத்தின் தொடக்க நாளான தை முதலாம்திகதி அன்று தைப்பொங்கல் கொண்டாடப்படுகின்றது. உணவு உற்பத்திக்கும், உயிரினங்கள் வாழ்விற்கும் தேவையான வெளிச்சம், வெப்பம் என்பவற்றை சூரியன் வழங்குகின்றான். ஆதலால் நெல் அறுவடையானதும் வீட்டு முற்றத்தில் புத்தரிசியில் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைத்து நன்றிக்கடன் எம் முன்னோர்கள் செலுத்தி வந்தனர். இதனால் தைப்பொங்கல் திருநாள் உழவர் திருநாள் என்றும் கூறப்படுகின்றது. தைப்பொங்கல் மறுநாள் பட்டிப் பொங்கல் இடம்பெறும். உழவுத் தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் கால் நடைகளை போற்றும் விழாவாக இது அமைகிறது.
சைவ மக்கள் மரபுவழி விழுமியங்களான அறம், அன்பு, அகிம்சை, நன்றி உணர்வு, பகிர்ந்து உண்ணல் ஆகிய பண்புகளை தைப்பொங்கல் பண்டிகை மூலம் வளர்த்துக் கொள்கின்றனர்.





Keine Kommentare:

Kommentar veröffentlichen