தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 26. Januar 2017

சனீஸ்வரர் வழிபாடு

மூல மந்திரம்
ஒம் ஐம் க்லீம் சனீஸ்வராய நமஹா

சனீஸ்வர காயத்திரி மந்திரம்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த ப்ரசோதயாத்

சனீஸ்வர தியான தோத்திரம்
நீலாஞ்ஜன ஸமா பாஸம்
ரவிபுத்ரம் யமாக் ரஜம் 
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸனைச்சரம்

சூர்ய புத்ரோ தீர்க்க தேஹோ
விஸாலாசஷ சிவப்பிரிய
மந்த சார ப்ரஸந்நாத்ம
பீடாம் ஹரது மேசனி


சங்கடம் தீர்க்கும் சனி பகவனே
மங்களம்பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தாதா

முனிவர்கள் தேவர் ஏனை மூர்த்திகள் முதலானோர்கள்
மனிதர்கள் சகல வாழ்வும் உன் மகிமையல்லால் வேறுண்டோ!
கனிவுளம் தெய்வம் நீயே! கதிர் சேயே! காகம் ஏறும்
சனியனே உனைத் துதித்தேன் தமியனேற்கு அருள் செய்வாயே!

Freitag, 20. Januar 2017

அங்கமும் வேதமும்

அங்கமும் வேதமும் ஓதுநாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்கு
ல் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடு
ம்
கணபதி யீச்சரங் காமுறவே.

நான்கு வேதங்களையும் ( இருக்கு, யசுர், சாமம், அதர்வணம்)  ஆறு அங்கங்களையும் (வேதத்தின் ஆறு அங்கங்களாகிய  சிட்சை, கற்பம், வியாகரணம், நிருக்தம் , சந்தோபிசிதம், சோதிடம் )  ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.

அந்தமும் ஆதியுந் நான்முகனும்
அரவணை யானும் அறிவரிய
மந்திர வேதங்க ளோதுநாவர்
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செந்தமி ழோர்கள் பரவியேத்துஞ்
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கந்தம் அகிற்புகை யேகமழுங்
கணபதி யீச்சரங் காமுறவே.

நான்முகனும் அரவணையானும் ஆதியாய முடியையும் அந்தமாகிய அடியையும் அறிதற்கு அரியவனாய், மந்திர வடிவான வேதங்களை ஓதும் நாவினரான அந்தணர் பரவி ஏத்தத் திருமருகலில் விளங்கும் இறைவனே! செந்தமிழ் வல்லோர் பரவித் துதிக்கும் சிறப்புமிக்க செங்காட்டங்குடியில் அகில் புகை மணமே கமழும் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் யாதோ? சொல்வாயாக.


பாரதி பாடிய முருகா


                                 முருகா!-முருகா!-முருகா!       
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
வருவாய் மயில்மீ தினிலே
வடிவே லுடனே வருவாய்!
தருவாய்ந லமும் தகவும் புகழும்
தவமும்தி றமும் தனமும் கனமும்
                                                                (முருகா)
அடியார்ப லரிங் குளரே
அவரை விடுவித் தருள்வாய்!
முடியா மறையின் முடிவே! அசுரர்
முடிவே கருதும் வடிவே லவனே!
                                                                                                 (முருகா)
சுருதிப்பொ ருளே,வருக!
துணிவே, கனலே, வருக!
கருதிக்க ருதிக் கவலைப் படுவார்
கவலைக்க டலைக் கடியும் வடிவேல்
                                                                (முருகா) 
அமரா வதிவாழ் வுறவே
அருள்வாய்!சரணம், சரணம்
குமரா, பிணியா வையுமே சிதறக்
குமுறும்சு டர்வே லவனே, சரணம்!
                                                                (முருகா)
அறிவாகிய கோயிலிலே
அருளாகியதாய் மடிமேல்
பொறிவேலுடனே வளர்வாய்! அடியார்
புதுவாழ்வுறவே புவிமீ தருள்வாய்
                                                                (முருகா)
குருவே! பரமன் மகனே!
குகையில்வ ளருங் கனலே!
தருவாய்தொழிலும் பயனும் அமரர்
சமரா திபனே! சரணம்!சரணம்!
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
முருகா!-முருகா!-முருகா!
                        முருகா!-முருகா!-முருகா!                    ---பாரதியார்


Mittwoch, 18. Januar 2017

மாதவிப் பொன் மயிலாள்



                                           இராகம் : கரகரப்பிரியா
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண
மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்
                                        (மாதவிப்
காதல் மழை பொழியும் கார்முகிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்

காதலன் நானிருக்கப் பேரெழிலாய்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
                                        (மாதவிப்
வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

வானில் விழும் வில் போல் புருவம் கொண்டாள் - இளம்
வயதுடையாள் இனிய பருவம் கண்டாள்

கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட

கூனல் பிறை நெற்றியில் குழலாட - கொஞ்சும்
குளிர் முகத்தில் நிலவின் நிழலாட - கலை
மானின் இனம் கொடுத்த விழியாட
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆஆ ஆஆஆஆஆ

மானின் இனம் கொடுத்த விழியாட - அந்த
விழி வழி ஆசைகள் வழிந்தோட - நல்ல
                                        (மாதவிப்
காதல் மழை பொழியும் கார்முகிலாய் - இவள்
காதலன் நானிருக்கப் பேரெழிலாய் - இங்கே
                                        (மாதவிப்
கரிதநிதபமகரி ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
கரிதநிதநிபதநிஸ்ரிநீ தபதமபமகரி

ஸரிகாமபதநி மாதவிப் பொன் மயிலாள்
ஸ்ரிரிகமநீ நிஸ்ஸ்ரிகதா தநிநிஸ்ரி பாதமாபமகரிஸ

ரிகமநி ஸ்ரிக மபதமா பதநி ஸ்ரிக நிரிஸ்தநி நித
மாபதநிஸ்கரி மாதவிப் பொன் மயிலாள்

தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி தகிட தகிட திமி
தா ஜிம் கிடதகதரிகிடதோம் தா ஜிம் கிடதகதரிகிடதோம்

தா ஜிம் கிடதகதரிகிடதோம் தாததிம்த தத்திம் தத்திம்
பதநிஸ்நித தணதஜம் தபஜுணுத ஜம் ஜம்

பதநி பதப ஜம் தஜம் தமதணகு ஜம் ஜம்

பமபதீம் தகிட நிதம ஜம் ஸ்ரித ஸ்நித சுகம் தகிட கரிநிதஜம்
பதநிஸ் தஜம் ஸ்ரிகம தகிடதஜம் கரிநீ ததரித ஜம்

ரிகமபா பதா தஜம் தணம் ஸ்கரி நிரிஸ் தணதா ப ஜணும்
ஸ்ரிகமாபதநீஸ்ரி கரிநீத தரிகிணதோம்

ஸ்ரிகாமபதாநிஸ் ரிஸ்நீத தரிகிணதோம்
ரிககாரி நிஸ்தாநி கரிநீத தரிகிணதோம் தரிகிணதோம் தரிகிணதோம்
                                                         (மாதவிப்