தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 12. Dezember 2016

கார்த்திகை விளக்கீடு









கார்த்திகை விளக்கீடு
 கார்த்திகை மாதம்  பௌர்ணமி நாளும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த திருக்கார்த்திகை நாளில் தமிழர்கள் தமது இல்லங்களிலும்  கோயில்களிலும்  பிரகாசமான  தீபங்களை ஏற்றி மகிழ்ச்சியாகக் கொண்டாடும் ஒரு தீபத் திருநாள் ஆகும்.
கார்த்திகை விழாவை குமராலாய தீபம், சர்வாலய தீபம், விஷ்ணுவாலய தீபம் என மூன்றாக ஆலயங்களிலும் வீடுகளியும் கொண்டாடுவர்.
·         குமராலய தீபம்: கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரம் கூடிவரும் நாளில் முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும்.
·         விஷ்ணுவாலய தீபம்: கார்த்திகை மாதத்தில் ரோகினி நட்சத்திரம்  கூடிவரும்  நாளில் விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும்.
·         சர்வாலய தீபம்:  கார்த்திகை மாதத்து முழுமதி திதியில் இந்து ஆலயங்களிலும்  வீடுகளிலும் கொண்டாடப்படும்.
·         படைத்தல் தொழிலைச் செய்யும் பிரம்மனும் காத்தல் தொழிலைச் செய்யும் விஷ்ணுவும் நானே பெரியவன் என்று வாதாடிப் பல வருடங்கள் போரிட்டனர். இவர்களின் கர்வத்தை அடக்க எண்ணிய சிவபெருமான், இவர்கள் முன் சோதிப்பிழம்பாகத் தோன்றினார்.
·         அடியையும், முடியையும் தேடும்படி அசரீரி கூறியது. அவ் ஜோதியின் முடியைக் காண அன்னப் பறவை வடிவங்கொண்டு பிரம்மன் விண்ணுலகம் சுற்றினார். அடியைக் காண திருமால் பாதாள லோகம் சென்று அடிமலரடியைத் தேடினார்.
·         அடிமுடி காணமுடியாத பரம்பொருளாக விளங்கிய எம்பெருமான் திருவண்ணமலையில் சோதியாக காட்சி கொடுத்தார். அதனால் இருவரும் சிவபெருமானே முழுமுதற் கடவுள் என்று ஏற்றுக்கொண்டனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட சோதியை எல்லோரும் காணும்படி காட்டியருள வேண்டும் என்று விண்ணப்பிக்க அவர் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று ஜோதிப்பிழம்பாக காட்சியருளினார்.
·         இந்தத் தத்துவத்தை விளக்குவதே கார்த்திகை விளக்கீடு ஆகும். யோக நெறியால் அன்றிக் காண முடியாத தெய்வ ஒளியை திருவண்ணாமலையில் ஏறத்தாழ மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள மலைமேல் திருக்கார்த்திகை நட்சத்திரத்தன்று காணலாம்.
சம்பந்தர் தனக்கு நிச்சயக்கப்பட்ட பூம்பாவாய் திடிரென மரணம் அடைந்தபோது விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய் எனப் பாடி அருளினார்.
வளைக்கை மடநல்லார் மாமயிலை வண்மறுகில்
துளக்கில் கபாலீச் சரத்தான்றொல் கார்த்திகைநாள்
தளத்தேந் திளமுலையார் தையலார் கொண்டாடும்
விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்.


Keine Kommentare:

Kommentar veröffentlichen