பச்சை மயில்
வாகனனே
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்ரமணியனே வா முருகா
பச்சை மயில்
வாகனனே - சிவ
பால சுப்பிரமணியனே வா - இங்கு
இச்சை இல்லாம்
உன்மேல் வைத்தேன்
எள்ளளவும் ஐயமில்லை - (பச்சைமயில்)
கொஞ்சும்
மொழியானாலும் - உன்னைக்
கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு
சர்ச்சை எல்லாம்
மறைந்ததப்பா - எங்கும்
சாந்தம் நீறைந்தப்பா - (பச்சைமயில்)
வெள்ளமது
பள்ளந்தனிலே பாயும்
தன்மை போல உள்ளந்தனிலே - நீ
மெள்ள மெள்ள
புகுந்து விட்டாய் - எந்தன்
கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சைமயில்)
நெஞ்சமதில் கோவில்
அமைத்தேன் அங்கு
நேர்மை என்னும் தீபம் வைத்தேன் - நீ
செஞ்சிலம்பை
கொஞ்சிடவே வா - முருகா
சேவற்கொடி மயில் வீரா - (பச்சைமயில்)
ஆறுபடை வீடுடையவா
எனக்கு
ஆறுதலைத் தருந் தேவா - நீ
ஏறுமயில்
ஏறிவருவாய் - முருகா
எங்கும் நிறைந்தவனே- (பச்சைமயில்)
அலைகடல் ஓரத்திலே
எங்கள்
அன்பான சண்முகனே - நீ
அலையா மனந்
தந்தாய் - உனக்கு
அனந்த கோடி நமஸ்காரம் - (பச்சைமயில்)
பச்சைமயில் வாகனனே சிவ
பாலசுப்பிரமணியனே வா -
இங்கு
இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்
எள்ளளவும்
ஐயமில்லையே
Keine Kommentare:
Kommentar veröffentlichen