சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது
பிரதோஷ விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை
என்னும் இரு காலங்களிலும், திரயோதசி
திதியில் வருவது
பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானின் கருணையை
நாடி இவ் வழிபாடு செய்யப்படும்.
மனிதர்களுக்கு
தேய்பிறையிலேயே முக்கியமான விரதங்கள் உள்ளன. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய
தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி. அதேபோல தேய்பிறையில் சஷ்டி விரதம். தேய்பிறையில் வரக்கூடிய
திரியோதசி திதி பிரதோஷ
விரதம் என்கிறோம்.
நாகம் தான்
கயிறாக நளிர் வரை அதற்கு மத்தாகப்
பாகம் தேவரொடு
அசுரர் படுகடல் அளறு எழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே
வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
மறைக்காடே.
……..சம்பந்தர்
திருமாலின் இருப்பிடமாக கூறப்படும் திருப்பாற்கடலை கடைந்து, அமுதத்தை
தேவர்களே பருகி பலம் பெறுங்கள் என்ற விஷ்ணுவின் ஆலோசையின்படி, தேவர்கள்
அசுரர்களுடன் சமாதானமாகி மந்திரகிரி மலையை பாற்கடலில் வைத்தார்கள்.
தேவர்களும், அசுரர்களும் தேவாமிர்தத்தினை பெறுவதற்காக வாசுகி
என்ற பாம்பைக் கயிறாகவும், மந்தரகிரி மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். மந்திரமலையானது
பாற்கடலினுள் மூழ்க
தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்தரகிரி
மலையை தாங்கினார்.
நீண்ட நேரம்
கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க
முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது.
திருப்பாற்கடலில் ஆலகால
விஷம் பரவியது. அந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. சிவபெருமானிடம் தம்மைக் காக்குமாறு ஓடிச்
சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக
சுற்றும் போது ஆலகாலம் வழிமறித்தது.
தேவர்கள் வந்தவழியே
திரும்பி சுற்ற ஆலகாலம் இடப்புறமாக வந்து மறித்தது.
எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுறுத்தியது. தேவர்கள் அஞ்சி ஓடி சிவனிடம் தஞ்சம் அடைந்தனர்.
தேவர்களின் துயர்போக்க எண்ணிய சிவபிரான் ஆலகலாத்தினை உண்டு
தேவர்களை காத்தருளினார். அவ்விஷம் கழுத்திலிருந்து கீழே இறங்காமல்
இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக
மாற்றிவிட்டது. இதனாலேயே சிவனை
நீலகண்டன் என அழைத்தார்கள். தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை
கடைந்த போது தோன்றிய அமிர்தத்தை உண்டு
தேவர்கள் பலத்தை பெற்று ஆனந்தம் அடைந்தனர். தேவர்களின்
வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் திருநடனம் புரிந்தார்.
சிவபெருமான் உமாதேவியார் காண நந்தி(இடப)தேவரின்
இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தருளினார். இத் திருநடனம் புரிந்த
காலம் சனிக்கிழமை மாலைநேரம் பிரதோஷ காலம்
ஆதலால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் விஷேடமாக கருதப்படுகின்றது.
எனவே பிரதோஷம் விரதமிருப்பவர்கள் இடப தேவரின் இரு
கொம்புகளுக்கு ஊடாக சிவலிங்கத்தை தரிசிப்பதன் மூலம் அருட்பிரவாகத்தைப் பெறலாம்
என்பது சிந்தனை.
சிவபெருமான் விஷம் உண்ட கார்த்திகை மாதம் சனிக்கிழமை
திரியோதசி திதி பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படும்.
மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னர் வரும் பிரதோஷமும்
மகாபிரதோஷம் எனவும் வழக்கத்தில் உள்ளது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen