தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 25. November 2016

கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி முருகா



கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
கையினில் வேல் பிடித்த கருணை சிவபாலனை
கண்ட நாள் முதலாய் காதல் பெருகுதடி
                                                                           (கண்ட நாள் முதலாய்
வண்டிசை பாடும் எழில் வசந்த பூங்காவில்
வந்து சுகம் தந்த கந்தனை என் காந்தனை
                                                                           (
கண்ட நாள் முதலாய்
நீலமயில் தனை நெஞ்சமும் மறக்கவில்லை
நேசமுடன் கலந்த பாசமும் மறக்கவில்லை
                                                                          
கோலக்குமரன் மனக்கோயிலில் நிறைந்துவிட்டான்
குறுநகை தனைக்காட்டி நறுமலர் சூட்டிவிட்டான்
                                                                             (
கண்ட நாள் முதலாய்
எழுதியவர்: திரு என்.எஸ். சிதம்பரம்            பாடியவர் : சுதா ரகுநாதன்
ராகம்: மதுவந்தி

                                     

Mittwoch, 23. November 2016

பிரதோஷ விரதம்

சிவபெருமானுக்குரிய விரதங்களுள் மிகவும் விசேஷமானது
பிரதோஷ விரதமாகும். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை, தேய்பிறை
என்னும் இரு காலங்களிலும், திரயோதசி திதியில் வருவது
பிரதோஷ தினமாகும். இந்த வேளையில் சிவபெருமானின் கருணையை நாடி இவ் வழிபாடு செய்யப்படும்.
மனிதர்களுக்கு தேய்பிறையிலேயே முக்கியமான விரதங்கள் உள்ளன. பெளர்ணமிக்கு பிறகு வரக்கூடிய தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி. அதேபோல தேய்பிறையில் சஷ்டி விரதம். தேய்பிறையில் வரக்கூடிய திரியோதசி திதி பிரதோஷ விரதம் என்கிறோம்.
நாகம் தான் கயிறாக நளிர் வரை அதற்கு மத்தாகப்
பாகம் தேவரொடு அசுரர் படுகடல் அளறு எழக் கடைய
வேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே.
……..சம்பந்தர்


திருமாலின் இருப்பிடமாக கூறப்படும்   திருப்பாற்கடலை கடைந்து, அமுதத்தை தேவர்களே பருகி பலம் பெறுங்கள் என்ற விஷ்ணுவின் ஆலோசையின்படி, தேவர்கள் அசுரர்களுடன் சமாதானமாகி மந்திரகிரி மலையை பாற்கடலில் வைத்தார்கள்.
தேவர்களும், அசுரர்களும்  தேவாமிர்தத்தினை பெறுவதற்காக வாசுகி என்ற பாம்பைக் கயிறாகவும், மந்தரகிரி மலையை மத்தாகவும் கொண்டு திருப்பாற்கடலை கடைந்தார்கள். மந்திரமலையானது பாற்கடலினுள் மூழ்க
தொடங்கியது. எனவே திருமால் ஆமையாக அவதாரம் எடுத்து மந்தரகிரி
மலையை தாங்கினார்.  

நீண்ட நேரம் கடைந்ததன் காரணமாக வாசுகி பாம்பினால் வலி தாங்க முடியாமல் ஆலகால விஷத்தினை கக்கியது.
திருப்பாற்கடலில் ஆலகால விஷம் பரவியது. அந்த ஆலகாலம் தேவர்களையும், அசுரர்களையும் துரத்தியது. சிவபெருமானிடம் தம்மைக் காக்குமாறு ஓடிச் சென்றார்கள்.  இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறித்தது.
தேவர்கள் வந்தவழியே திரும்பி சுற்ற ஆலகாலம் இடப்புறமாக வந்து மறித்தது.
எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுறுத்தியது. தேவர்கள் அஞ்சி ஓடி சிவனிடம் தஞ்சம் அடைந்தனர்.

தேவர்களின் துயர்போக்க எண்ணிய சிவபிரான் ஆலகலாத்தினை உண்டு தேவர்களை காத்தருளினார். அவ்விஷம் கழுத்திலிருந்து கீழே இறங்காமல் இருக்க அருகிலிருந்த பார்வதி சிவபெருமானின் கழுத்தினை இறுகப்பிடித்தார். இதனால் ஆலகாலம் சிவபெருமானின் கழுத்தினை நீலமாக மாற்றிவிட்டது. இதனாலேயே சிவனை நீலகண்டன் என அழைத்தார்கள். தேவர்கள் சிவனின் அனுமதியுடன் மீண்டும் பாற்கடலை கடைந்த போது தோன்றிய அமிர்தத்தை உண்டு
தேவர்கள் பலத்தை பெற்று ஆனந்தம் அடைந்தனர். தேவர்களின் வேண்டுதலுக்கு இணங்க சிவபெருமான் திருநடனம் புரிந்தார்.
சிவபெருமான் உமாதேவியார் காண நந்தி(இடப)தேவரின் இருகொம்புகளுக்கு இடையே திருநடனம் புரிந்தருளினார். இத் திருநடனம் புரிந்த காலம்  சனிக்கிழமை மாலைநேரம் பிரதோஷ காலம் ஆதலால் சனிக்கிழமைகளில் வரும் பிரதோஷம் விஷேடமாக கருதப்படுகின்றது.


எனவே பிரதோஷம் விரதமிருப்பவர்கள் இடப தேவரின் இரு கொம்புகளுக்கு ஊடாக சிவலிங்கத்தை தரிசிப்பதன் மூலம் அருட்பிரவாகத்தைப் பெறலாம் என்பது சிந்தனை.
சிவபெருமான் விஷம் உண்ட கார்த்திகை மாதம் சனிக்கிழமை திரியோதசி திதி பிரதோஷம் மகா பிரதோஷம் எனப்படும்.
மாசி மாதம் வரும் மகாசிவராத்திரிக்கு முன்னர் வரும் பிரதோஷமும் மகாபிரதோஷம் எனவும் வழக்கத்தில் உள்ளது.








Sonntag, 20. November 2016

நாதஸ்வர ஓசையிலே ...... பூவும் பொட்டும்









நாதஸ்வர ஓசையிலே - பூவும் பொட்டும்

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடம் ஆடுகின்றாள்

(
நாதஸ்வர )

கோலமிட்ட மணவறையில் குங்குமத்தின் சங்கமத்தில்
மாலையிட்ட பூங்கழுத்தில் தாலி கட்டும் வேளையிலும்
ஊரார்கள் வாழ்த்துரைக்க ஊர்வலத்தில் வரும்பொழுதும்
தேவன் வந்து பாடுகின்றான் தேவி நடம் ஆடுகின்றாள்

(
நாதஸ்வர )

மை வடித்த கண்ணிரண்டும் மண் பார்க்கும் பாவனையில்
கைப் பிடித்த நாயகனின் கட்டழகு கண்டு வர
மெய்சிலிர்த்து முகம் சிவக்கும் மெல்லிடையாள் கூந்தலிலே
தேவி நடம் ஆடுகின்றாள் தேவன் வந்து பாடுகின்றான்

(
நாதஸ்வர )

கற்பில் ஒரு கண்ணகியாய் காதலுக்கு ஜானகியாய்
சிற்ப மகள் வாழ்க்கை என்று தேவன் வந்து பாடுகின்றான்
பத்தினியைக் காவல் கொண்டு பார் புகழ வாழ்க என்று
சத்தியத்தின் மேடையிலே தேவி நடம் ஆடுகின்றாள்
(
நாதஸ்வர )


Freitag, 18. November 2016

ஏக தந்தாய வக்கிர துண்டாய கௌரீ தனையாய தீமஹி




கண நாயகாய கண தெய்வதாய கணா தக்ஷ்யா தீமஹி
குண ஷரீராய குண மந்திதாய குணேஷானாய தீமஹி
குணா தீதயா குணா தீஷாய குண ப்ரவிஷ்தாய தீமஹி
ஏக தந்தாய வக்கிர துண்டாய கௌரீ தனையாய தீமஹி
கஜே ஷானாய பால சந்திராய ஸ்ரீ கணேஷாய தீமஹி

காண சதுராய கான ப்ராணாய கானாந்த ராத்மனே
கானோத் சுகாய கானமத்தாய கானோத்சுக மனசே
குரு பூஜிதாய குரு தெய்வதாய குரு குலஸ்தாயினே
குரு விக்ரமாய குஹ்ய ப்ரவராய குரவே குண குரவே
குரு தையகலச் ஹேத்ரே குரு தர்ம சடாராத்யாய
குரு புத்ர பரித்ராத்ரே குரு பாகண்ட கண்டகாய
கீத சாராய கீத தத்வாய கீத கோத்ராய தீமஹி
கூன குல் பாய கந்தா மத்தாய கோஜய ப்ரதாய தீமஹி
குணா தீதாய குணா தீஷாய குண ப்ரவிஷ்டாய தீமஹி
ஏக தந்தாய வக்கிர துண்டாய கௌரீ தனையாய தீமஹி
கஜே ஷானாய பால சந்திராய ஸ்ரீ கணேஷாய தீமஹி

க்ரந்த் கீதாய க்ரந்த கேயாய க்ரந்த்தாந்தராத்மனே
கீத லீனாய கீதாஷ்ரயாய கீத வாட்ய படவே
கேய சரிதாய காயக வராய கந்தர்வ ப்ரிய க்ரிதே
காயாகா தீன விக்கிரஹாய கங்க ஜல ப்ரண்யவதே
கௌரி ஸ்தனந்தஹாயாய கௌரி ஹ்ருதய நந்தனாய
கௌர பானு சுதாய கௌரி கணேஷ்வராய
கௌரி ப்ரணயாய கௌரி ப்ரவணாய கௌரி பாவாய தீமஹி
கோ சஹஸ்ராய கோவர்தனாய கோப கோபாய தீமஹி
குணா தீதாய குணா தீசாய குண ப்ரவிஷ்டாய தீமஹி
ஏக தந்தாய வக்கிர துண்டாய கௌரீ தனையாய தீமஹி
கஜே ஷானாய பால சந்திராய ஸ்ரீ கணேஷாய தீமஹி








Mittwoch, 16. November 2016

சங்கடஹர சதுர்த்தி விரதம்




சங்கடஹர சதுர்த்தி விரதம்
விநாயகர் காயத்திரி மந்திரம்
ஓம் தற் புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
ந்நோ தந்தி ப்ரசோதயாத்
விநாயகப் பெருமானை வழிபாடு செய்யும்  விரதமாகவும், சங்கடங்கள் அனைத்தையும் (ஹர – அழித்தல்) தீர்க்கக்கூடிய விரதமாகவும் சங்கடஹர சதுர்த்தி விரதம் கருதப்படுகின்றது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமிக்கு அடுத்து தேய்பிறையில் வரும் 4ம் நாள் சதுர்த்தி திதியே சங்கடஹர சதுர்த்தி ஆகும். அதாவது கிருஷ்ணபக்ஷத்தில் வரும் சதுர்த்தி ஆகும். 
சங்கடஹர சதுர்த்தி விரதத்தை ஆவணி மாத தேய்பிறையில் வரும் சதுர்த்தி நாளில் இவ்விரதத்தை தொடங்கி ஓராண்டு அல்லது மாசி மாதம் கிருஷ்ணபட்சம் செவ்வாய்க் கிழமையோடு வரும் சதுர்த்தி திதியில் தொடங்கி ஓராண்டு  அனுஷ்டிப்பார்கள். செவ்வாய் கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதை "மகா சங்கடஹர சதுர்த்தி" என்று அழைக்கின்றனர்.
 பகல்பொழுது விரதமிருந்து மாலை ஆலயத்திற்கு சென்று விநாயகப் பெருமானை வழிபட்டு வீட்டுக்கு வந்து விரதத்தைப் பூர்த்திசெய்வார்கள்.
இவ்.விரதத்தை அனுஷ்டிப்போர்க்கு அனைத்துப் பாவங்களும் அகலும். குடும்பத்தில் சுபிட்சமும், தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
சனி தோஷம் உள்ளவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால், சனியின் தாக்கத்தில் பெரும்பகுதி குறையும்.

“கஜாநநம் பூத கணாதி ஸேவிதம்
கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்
உமாஸுதம் சோக விநாச காரணம் தம்
நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்”


Montag, 14. November 2016

ஆலய வழிபாடு


சைவர்கள் வழிபடும் சைவநீதியுள்ள இந்து ஆலயம்
1.    நிர்வாகம்:- ஆலய பரிபாலன சபை அல்லது தர்மகர்த்தா சபை ஆனது அறநெறி சார்ந்தவர்களாக, தர்மநெறி சார்ந்தவர்களாக, கல்வியாளர்களாக, ஆன்மிகப் பண்புள்ளவர்களாக, பொதுவுடமைக் கொள்கையுடைய ஆளுமைதிறன் கொண்ட அங்கத்தினரை கொண்ட இறைபக்தி சபையால் பரிபாலனம் செய்யப்படவேண்டும். ஆலய கடமைகளை அனைத்து அங்கத்தினரும் இணைந்து ஆலோசித்து ஆற்றும் பணி ஆக்கபூர்வமானதாக இருக்கும். தன்னிச்சையான செயல்பாடுகளை தவிர்த்து சபையின் அங்கீகாரத்துடன் நிறைவேற்ற முயலவேண்டும். ஆலயத்துக்கு தேவையான ஆலோசனைகளை உண்மை பேசும் நற்பண்புகள் கொண்ட ஒழுக்கமானவர்களிடம் இருந்து பெற்று நடைமுறைப்படுத்த வேண்டும்.

   சுழற்சி முறையில் சமஷ்டி அரசைப்போல் இரு மாதங்களுக்கு ஒருவர் ஆலயத்தின் தலைவர் என்றவகையில் அறுவரைக் கொண்ட நிர்வாக சபையை உருவாக்கவேண்டும். இதன் மூலம் தலைமைதேர்வு அரசியல் கலாச்சாரத்தை முற்றாக ஆலயங்களில் இல்லாது நீக்கமுடியும். அத்தோடு ஆலயத்தில் தொண்டாற்றுவோர் நிர்வாகத்தில் பங்கேற்க முடியும். ஒன்றாக நின்று இறைவனுக்கு உழவாரத்தொண்டு செய்யவேண்டிய இடத்தில் ஆளும், எதிர் கட்சி கேவலங்கள் நீக்கப்பட வேண்டும். ஒருமித்த மனதோடு உறுப்பினர் தெரிவுகள் சாலச்சிறந்தது. தாமே பிரதிநிதி என்ற மக்கள் அதிகம் நிறைந்த சபையில் வேடம் போடும் வேடதாரிகளை இனம்கண்டு ஆலயத்தை விட்டு அகற்றுதல் பொருத்தம்.

2.    ஆலயம் அமைத்தல்:- வேதமும், ஆகமமும் சிவபெருமானால் அருளிச்செய்ப்பட்டவை என்று சொல்லப்படுகிறது. சைவ மக்கள் பிறவித்துன்பம் நீங்கி பிறவாமை ஆகிய பேரின்பமாகிய இறைவனின் பாதங்களைஅடையும் வழிமுறையான சரியை, கிரியை, யோகம், ஞானம் எனும் நான்கு முறைகளால் இறைவனை வழிபடலாம் என்கிறது சைவ சமயம். சரியை – ஆலயம் அமைத்தல்,தொண்டு; கிரியை – இறைவடிவங்களை வழிபடுதல்; யோகம் – அகத்தால் தியானித்தல் ; ஞானம் – அனுபவ அறிவால் பக்குவம் பெறல்.  

3.    சைவ ஆகமங்களை அடிப்படையாகக் கொண்டு ஆலயம் அமைத்து தெய்வப்பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், செய்து  நித்திய நைமித்திய  பூஜைகளை சிவாச்சாரியார்களைக் கொண்டு செய்து இறைவனை வழிபாடு செய்யலாம்.  நித்திய பூஜையில் ஏற்படும் குறைகளை நிவர்த்திசெய்வதற்காக நிகழ்த்தப்படும் பூஜையே நைமித்திய  பூஜையாகும். இதுவே வருடம் ஒருமுறை செய்யும் மகோற்ஷவம் ஆகும். சைவ ஆகம விதிகளுக்கு அமைய மகோற்ஷவம் போன்ற கொடியேற்றத்துடன் இணைந்த திருவிழா முறைமை காலம் காலமாக ஆன்றோர்களால் அனுஷ்டிக்கப்பட்டு இன்றுவரை நடைமுறையில் உள்ளது.
கோவில் திருப்பணி வேலைகளை உரிய நேரத்தில் செய்து அதற்குரிய சடங்குகளை நிறைவேற்றுதல் ஆலய நிர்வாகத்தின் கடமை.
உடலே கோயில்.
ஞானம் முதிரப் பெற்றவர்க்கு இருதயமே இறைவனின் கரு வறையாயும், ஊனால் அமைந்த உடம்பே அக்கருவறையை சூழ்ந்துள்ள சுற்றுபிரவாரமாயும், வாயே ஆலயத்தின் வாயிலாயும், உயிரே இலிங்கமாயும், கண் முதலிய ஐம்பொறி உணர்வுகளே ஒளிமிக்க ஆலய தீபங்களாயும் அமையும்.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே!



4.   ஆலயபூசகர்:- ஆலய குருமார்களிலேயே ஆலயத்தின் அருள்நிலை தங்கியுள்ளது. தகைமைகள் பூரணத்துவம் கொண்ட தகுதியுள்ள பூசகரால், சிவாச்சாரியார்களால் இறைவனுக்கு நித்தியபூஜைகள், திருவிழாக்கள் நடத்தப்படவேண்டும். பூஜைகள் இறைவனுக்கு செய்யவேண்டும். இறைவனுக்கு செய்யும் பூஜைகளை பக்தர்களுக்கு சமர்பிக்கவேண்டும். இறை தரிசனத்துக்காக பத்தர்கள் காத்திருப்பார்கள். அவர்கள் வரும்வரையில் காத்திருந்து பூஜைகள் செய்யவேண்டும். ஆறுதலாக ஆன்மீக பக்தியோடு பூசகர்கள் செய்யும்  அர்சனைகளை உள்வாங்கி  பூஜிக்க வேண்டும். பூசகர்கள் பூஜைகளை செய்யும்போது, வழிபாடுகள் செய்யும் பக்தருக்கு மறைக்காது பூஜைகள் தெரியும்வண்ணம் நின்று பூஜைகளை செய்வது சிறப்பு.
பக்திநிலைக்குரிய கிரியைகளையும், அறிவுநிலைக்குரிய ஞானத்தையும் இறை வழிபாட்டுத் தலங்கள் குருக்கள்மார்கள் ஊடாக மக்களுக்கு தரவேண்டும்.
கருவறையினுள் ஆச்சாரம் மிக்க ஆச்சாரியர்கள் தவிர்ந்த ஏனையோர் உள்ளே பிரவேசிக்க கூடாது.
பூஜைகளின் இறை பிரசாதங்களை உரியமுறையில் கொடுத்தல் வேண்டும். வீபூதியை பெருவிரலால் பூசகர்கள் நெற்றியில் இடல் ஆகாது. வீபூதியை இரு கைகள் நீட்டி வாங்கி முகத்தை திருப்பி நின்று சிவசிவ உச்சரிப்புடன் நெற்றியில் உத்தூளனமாக அல்லது திரிபுண்டரமாக இடுவதே சைவ மரபாகும். அதேபோல் மோதிரவிரால் சந்தனம், குங்குமம் இடுதல் வழமையான நடைமுறை.
5.    இறைவன் புகழை பாடுதலன்றி வீண் வார்த்தைகள் பேசாமல் இருக்க கூட்டுப்பிராத்தனை பஜனை போன்றவற்றை உரிய காலத்தில் நடத்தலாம்.
6.    தமிழ் வேதமாகிய பஞ்ச புராணத்தை ஓதும்போது அடக்க ஒடுக்கமாக நின்று முதலில் திருச்சிற்றம்பலம் என கூறியபின் தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புராணம், வாழ்த்து ஆகிய அருட்பாக்களை மனம் கசிந்துருகி பண்ணிசையோடு ஓதுதல் வேண்டும். பஞ்ச புராணத்தை ஓதும்போது அனைவரும் அருட்பாக்களை கவனித்து தியானத்தில் அல்லது அமைதியாக இருக்கவேண்டும். அமைதியின்மை  அருட்பாக்கள் ஓதுவோர்க்கு இடையூறாக இருக்கும்.
7.    சகல பக்தர்களும் சுவாமி தரிசனம் பெறும் பொருட்டு ஆண் பெண் இருபாலரும் இரு பக்கங்களிலும் நின்று  தரிசனம் செய்தல் வேண்டும். நடுவில் இடை வெளி விட்டு நின்று வழிபாடு செய்தால் அனைத்து அடியார்களும் வழிபாடு செய்ய ஏதுவாகவிருக்கும்.
8.    திருகோவிலை புனிதமாக வைத்திருக்க வேண்டும். இது அடியார்களின் பக்தி கடமையாகும்.
9.       சகல இந்துக்களின் பராம்பரிய விழாக்களான தைபொங்கல்விழா, கலைவாணிவிழா போன்ற விழாக்களை ஆலயமே நடத்தவேண்டும். புலம்பெயர் நாடுகளில் ஆன்மீக சம்பந்தம் இல்லாதவர்கள் நடத்துவதால் திசை மாறிய நோக்கில் நிகழ்வுகள் நடைபெறுவதுடன் இந்துக்களின் கலை கலாச்சாரம் வியாபார கலாச்சாரமாகவும், தம்மை தாமே பிரதிநிதிநிதித்துவப்படுத்தும் குழு கலாச்சாரமாகவும் மாறிவருகின்றன. பகுத்து அறியும் திறன் அற்ற பெற்றோர்களின் தூரநோக்கு அற்ற தன்மையினாலேயே இவ்வாறான நிகழ்வுகள் புதிது புதிதாக தோற்றம் பெறுகின்றன. பல தமிழர் பாடசாலைகளில் கலைவாணிவிழா கூட பாடசாலைகளில் கொண்டாடப்படுவதில்லை என்பது வேதனையான விடயம்தான்.
எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.

ஒரு செயலைச் செய்து முடிக்கும் வழியை அறிந்து தொடங்குக. தொடங்கியபின் அது பற்றி எண்ணிக் கொள்வோம் என்பது குற்றம். தெளிவுரை:- சாலமன் பாப்பையா

நன்றாகச் சிந்தித்த பிறகே செயலில் இறங்க வேண்டும்; இறங்கிய பிறகு சிந்திக்கலாம் என்பது தவறு. தெளிவுரை:- கலைஞர்