பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் உத்திர
நட்சத்திரத்தில் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவன், இறைவியைத் திருமணம் செய்த
நாளாகப் போற்றப்படுகின்றது. இத் தினத்தில் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம்
செய்தார். முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தார். இராமர் சீதையை
மணமுடித்தார். திருவரங்கநாதர் ஆண்டாளை திருமணம் செய்தார். திருபாற்கடலில் இருந்து செல்வத்தை தருகின்ற
இலட்சுமிதேவி வெளிப்பட்ட நாளும் பங்குனி உத்திரமாகும். இதனால் இவ் விரதம் கல்யாண
விரதம் என அழைக்கப்படும். சிவன், முருகன், பெருமாள் ஆலயங்களில் தெய்வங்களுக்கு
திருமண விழா நடைபெறும். பங்குனி உத்தரத்தில் ஐயப்பன் அவதரித்ததால் ஐயப்பன்
ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெறும்.
பங்குனி உத்திரம் தினத்தில்
கன்னிப்பெண்கள் சிவ விரதமான கல்யாணசுந்தரர் விரதத்தை அனுஷ்டித்து கல்யாணசுந்தர
மூர்த்தியை வழிபடுவர். இதனால் திருமணங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.
Keine Kommentare:
Kommentar veröffentlichen