சித்திரை வருடப்பிறப்பு
சித்திரை மாதம் இளவேனில்
முதல் மாதமாகும். அக் காலத்தில்
இராசிகளில் முதலாவதான மேட இராசியிலே சூரியன் பிரவேசிக்கின்றார். அவ் வேளையில்
தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாடப்படுகின்றது.
சித்திரைப் புத்தாண்டு பிறப்பு
தினத்தில் பல வகையான மலர்கள் (தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ),
இலைகள் (துளசி, வில்வம்), தளைகள், அறுகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி, பால், கோசலம், கோமயம், கோரோசனை, பச்சைக் கற்பூரம்,
ஆகியவற்றையும் சேர்த்து அவிக்கின்ற
விசேட நீர் மருத்துநீர் என ஆலயங்களில் வழங்கப்படும்.
அதனை மக்கள் தலைக்கு தேய்த்து நீராடி புதிய ஆடை அணிவர். ஆலய தரிசனம் செய்து
பெற்றோரை வணங்கி ஆசி பெறுவார். பின்னர் உற்றார் உறவினருடன் விஷேடமாக சமைக்கப்பட்ட
உணவு உண்டு மகிழ்வர்.
புத்தாண்டு தினத்தில் அந்த ஆண்டு
பலனை வாசிப்பதும் கேட்பதும் வழக்கமாகும். குறித்த கைவிசேட சுபநேரத்தில் கைவிசேடம்
பரிமாறுவதன் மூலம் அவ் ஆண்டில் பணப்பெருக்கம் உண்டாகும் என்று சைவர்கள்
நம்புகின்றனர்.
இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள்
யாவும் சூரியனின் நிலையை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுகின்றன. அன்றியும்
சூரியன் உதிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, வீடு, வாசல்
அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு அன்று சூரியனுக்கு பொங்கிப் படைக்கும் வழக்கம்
நிலவி வருகின்றது.
Keine Kommentare:
Kommentar veröffentlichen