தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 30. August 2016

ஆவணி விநாயகர் சதுர்த்தி

விநாயக சதுர்த்தி என்பது விநாயகப்பெருமானின் முக்கியமான விழாவாகும்.


 விநாயகப் பெருமான் ஆவணி மாதம் சதுர்த்தி திதியன்று அவதரித்தார். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாள் அன்று விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது. விநாயகரை வழிபாடு செய்தபின்னே எப் பணியையும் செய்வதென்பது சைவசமயத்தவரின் மரபாகும்.இது சிவன் மகனுக்கு கொடுத்த கொடையாக கருதப்படுகின்றது. அந்த வகையில் நாம் நம்பிக்கை வைத்து தும்பிக்கையானை முதலில் வழிபாடு செய்கின்றோம். 


ஆவணி சதுர்த்தி கொண்டாடுவதற்கு வேறு கதையும் கூறுவார்கள்.

ஒருமுறை விநாயகப் பெருமான் கைலை மலையில் நடனம் ஆடினார்.அதனை சந்திரன் பார்த்து சிரிக்க விநாயகப் பெருமானுக்கு கோபம் வந்தது.அதனால் சந்திரனுக்கு சாபம் கொடுத்தார்.பெரியோர் முன்னிலையில் என்னைப் பார்த்து சிரித்து பரிகாசம் செய்த உனது ஒளி உலகில் பரவாது இருக்க கடவது என சபித்தார்.அதற்கு சாபநீக்கம் வேண்டும் என எல்லோரும் வேண்டியதால் விநாயகர் ஆவணி சதுர்த்தி அன்று சந்திரனைப் பாராமல் தம்மை சிறப்பாக பூஜிப்பவர்கள் தம் அருளை பூரணமாகப் பெற்றுக்கொள்ளலாம்.மற்றைய தினங்களில் சந்திரனின் ஒளியை எல்லோரும் அனுபவிக்கலாம் என கூறி அருளினார்.


சீதக் களபச் செந்தா மரைப்பூம்

பாதச் சிலம்பு பலவிசை பாடப்

பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்

வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்

பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்

அஞ்சு கரமும் அங்குச பாசமும்

நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!


மங்களத்து நாயகனே மண்ணாளும் முதலிறைவா! 
பொங்குதன வயிற்றோனே பொற்புடைய ரத்தினனே 
சங்கரனார் தருமதலாய் சங்கடத்தைச் சம்கரிக்கும் 
எங்கள்குல விடிவிளக்கே எழில்மணியே கணபதியே! 
  நாமும் விநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்வோம்!வரசித்தி அருளைப் பெறுவோம்!இந்துவாக வாழ்வோம்!சைவனாக வளர்வோம்!




Keine Kommentare:

Kommentar veröffentlichen