தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 1. August 2016

ஆடிப்பூரம்

 
ஆடிப்பூரம்
சைவ சமயத்தினரின் வழிபாடுகளில் ஆடிமாதம் அம்பிகையை வழிபட உகந்த காலமாகும். அம்பிகை மீது பற்றுக் கொண்டவர்கள் ஆடிப்பூரம் நிகழ்வை ஆடிமாதத்தில் சிறப்பான வழிபாடாக கொண்டாடி மகிழ்வார்கள். ஆடிமாதத்தில் பூர நட்சத்திரம் உள்ள காலத்தில் ஆடிப்பூர விழாவைக் கொண்டாடுவார்கள். இந்நாளில் அம்பிகையும், ஆண்டாளும் அவதரித்த நாளாகக் கருதப்படுகின்றது. அகிலத்தில் உள்ள உயிர்களை எல்லாம் காத்து அருள்புரியும் பராசக்தியான அம்பிகையின் மீது  நம்பிக்கை கொண்டுள்ள பக்தர்கள், அம்பிகையை சிறப்பாக அலங்காரம் செய்து கொண்டடுவார்கள். அம்பிகையின் மனம் குளிர வளையல்கள் போட்டு வளைகாப்பு செய்து ருது  சாந்தி உற்சவமகவும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தியாவில் வில்லிப்புத்தூர் கிராமத்தில் ஆழ்வார்களில் மூத்த பெரியாழ்வார் குழந்தைப் பாக்கியம் வேண்டி பெருமாள் அரங்க நாதனை வழிபட்டதன் பலனாக, ஆடிப்பூர நன்னாளில் பூமாதேவி குழந்தையாக துளசி மாடத்தில் அவதரித்தார். அந்தக் குழந்தையை அணைத்த பெரியாழ்வார் கோதை எனப் பெயர் சூட்டி கண்ணன் பெருமைகளைப் சொல்லி வளர்த்தார். கோதையும் கண்ணன் மீது பற்றுள்ளம் கொண்டு வளர்ந்து வந்தாள். பெருமாளுக்கு அணிவிக்கும் முன் மாலைகளை கோதை தான் அணிந்து அழகு பார்த்து விட்டு கழற்றி வைத்து விடுவாள். அதையே பெரியாழ்வார் பெருமாளுக்கு அணிவிப்பார். பெருமாளுக்கு உரிய மாலை கோதை சூடி அழகு பார்த்ததை பெரியாழ்வார் பார்த்து கோதையை கண்டித்து, அதன் பின் புதிய மாலை தொடுத்து பெருமாளுக்கு அணிவித்தார். அந்த மாலை அறுந்து விழுந்தது.
கோதை தான் அணிந்த மாலையை கொடுத்து அணிவிக்குமாறு சொன்னாள். அந்த மாலையை பெரியாழ்வார் அணிவித்த போது மாலையை பெருமாள் ஏற்றுக் கொண்டார். அதனாலேயே கோதை சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் என அழைக்கப்பட்டாள்.
கண்ணன் மீது பற்றுக் கொண்ட பருவ வயதை அடைந்த கோதை பெருமாள் மீது காதல் கொண்டு, அவரையே மணப்பதாக உறுதி கொண்டாள். ஒரு நாள் பெரியாழ்வாரின் கனவில் தோன்றிய  ஸ்ரீரங்கப்பெருமாள், கோதையை  ஸ்ரீரங்கம்  அழைத்து வருமாறு அருளினார். அதன்படி கோதையுடன் பெரியாழ்வார் ஸ்ரீரங்கம் சென்றார். கோதை ஸ்ரீரங்கத்தில் மறைத்து விட்டாள்.
பெரியாழ்வார் கோதையை தேடியும் கிடைக்காததால் பெருமாளிடம் முறையிட்டார். உமது மகளை ஆண்டாள் ஆக ஏற்றுக் கொண்டோம் என்ற அசரீதியுடன் பெருமாள் ஆண்டாளுடன் காட்சி கொடுத்தார். இந்நிகழ்வு பங்குனி உத்தரத்தில் நிகழ்ந்தது. வில்லிப்புத்தூர் பெருமாள் வைத்து ஆண்டாளை மணந்தார் என இந்நாளில் கொண்டாடுவார்கள்.
சூடிக்கொடுத்த சுடர் கொடியாள் ஆண்டாள் அவதரித்த ஆடிப்பூர நன்நாளில் பெருமாள் ஆலயங்களில் ஆண்டாளுக்கு வளையல்கள் அணிந்து வளைகாப்பு செய்து ருது  சாந்தி உற்சவமகவும் அடியவர்கள் கொண்டாடி மகிழ்வார்கள்.
ஆடிப்பூர நன்நாளில் அம்பிகை, ஆண்டாள் மீது பற்றுக் கொண்டு வழிபடும் போது திருமணத் தடைகளில் இருந்து நீங்கி பெண்களுக்கு திருமணம் நடைபெற்று வாழ்வில் சகல சுப நிகழ்வுகள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


Keine Kommentare:

Kommentar veröffentlichen