தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 28. April 2020

இருமலு ரோக முயலகன் வாதம்





தனதன தான தனதன தான
     
தனதன தான ...... தனதான



இருமலு ரோக முயலகன் வாதம்
     
எரிகுண நாசி ...... விடமே நீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
     
எழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     
படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி
     
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவர் ஆட
     
வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகி லூர்தி
     
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
     
தணிமலை மேவு ...... பெருமாளே.

Keine Kommentare:

Kommentar veröffentlichen