தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Sonntag, 19. April 2020

கலையாத கல்வியும் - மிகையும் துரத்த


அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மை பதிகம்

மிகையும்  துரத்த  வெம்பிணியும்  துரத்த 
          வெகுளியானதும்   துரத்த 
மிடியும்  துரத்த  நரைதிரையும்   துரத்தமிகு 
          வேதனைகளும்   துரத்த 
பகையும்   துரத்த  வஞ்சனையும்   துரத்தப் 
           பசியென்பதும்   துரத்தப் 
பாவம்  துரத்த  பதி  மோகம்  துரத்தப் 
          பல  காரியமும்  துரத்த 
நகையும்  துரத்த  ஊழ்  வினையும்  துரத்த 
         நாளும்  துரத்த   வெகுவாய் 
நாவறண்டோடி  கால்தளர்ந்திடும்  என்னை 
         நமனும்   துரத்தவானே
அகில  உலகங்கட்கும்  ஆதாரதெய்வமே!
        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
       அருள்வாமி !   அபிராமியே !      


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
     கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
       கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
       தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
       தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்

       ஒரு துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
       தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
       ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
       அருள்வாமி! அபிராமியே!


 

Keine Kommentare:

Kommentar veröffentlichen