தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Montag, 13. April 2020

தோடுடைய செவியன்


திருஞானசம்பந்தர் தேவாரம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 

தோடு காதில் அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி, சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பிரமன்(நான்முகன்) உம்மை அன்றொருநாள் பணிந்து துதிக்க, பிரம்மனுக்கு அருள் வழங்கி, பெருமை மிக்க பிரம்மாபுரத்தில் அமர்ந்து  இருக்கும் பெருமான்  இவனல்லவா!    ஏடு – தாமரை    பீடு – பெருமை



Keine Kommentare:

Kommentar veröffentlichen