தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந்
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் ...... கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந் இன்பவுரி கொண்டுநன்
சந்தொடம் அணைந்துநின்று ...... அன்புபோல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் ...... சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்ட நடனம்பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனங்கொளும் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
தந்ததன தந்தனந் ...... தந்ததானா
தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
தண்கழல் சிலம்புடன் ...... கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந் இன்பவுரி கொண்டுநன்
சந்தொடம் அணைந்துநின்று ...... அன்புபோல
கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
கஞ்சமலர் செங்கையும் ...... சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்ட நடனம்பதம் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சி நடனங்கொளும் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.