தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Mittwoch, 29. April 2020

தண்டையணி வெண்டையம் கிண்கிணி



தந்ததன தந்தனந் தந்ததன தந்தனந்
     தந்ததன தந்தனந் ...... தந்ததானா

தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும்
     தண்கழல் சிலம்புடன் ...... கொஞ்சவே நின்
தந்தையினை முன்பரிந் இன்பவுரி கொண்டுநன்
     சந்தொடம் அணைந்துநின்று ...... அன்புபோல

கண்டுற கடம்புடன் சந்த மகுடங்களும்
     கஞ்சமலர் செங்கையும் ...... சிந்துவேலும்
கண்களு முகங்களும் சந்திர நிறங்களும்
     கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ

புண்டரிகர் அண்டமும் கொண்ட பகிரண்டமும்
     பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும் வளர்ந்துமுன்
     புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்

கொண்ட நடனம்பதம் செந்திலிலும் என்றன்முன்
     கொஞ்சி நடனங்கொளும் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடும்
     கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

Dienstag, 28. April 2020

இருமலு ரோக முயலகன் வாதம்





தனதன தான தனதன தான
     
தனதன தான ...... தனதான



இருமலு ரோக முயலகன் வாதம்
     
எரிகுண நாசி ...... விடமே நீ
ரிழிவு விடாத தலைவலி சோகை
     
எழுகள மாலை ...... யிவையோடே

பெருவயி றீளை யெரிகுலை சூலை
     
பெருவலி வேறு ...... முளநோய்கள்
பிறவிகள் தோறு மெனைநலி யாத
     
படியுன தாள்கள் ...... அருள்வாயே

வருமொரு கோடி அசுரர் பதாதி
     
மடியஅ நேக ...... இசைபாடி
வருமொரு கால வயிரவர் ஆட
     
வடிசுடர் வேலை ...... விடுவோனே

தருநிழல் மீதில் உறைமுகி லூர்தி
     
தருதிரு மாதின் ...... மணவாளா
சலமிடை பூவின் நடுவினில் வீறு
     
தணிமலை மேவு ...... பெருமாளே.

Sonntag, 19. April 2020

கலையாத கல்வியும் - மிகையும் துரத்த


அபிராமி பட்டர் அருளிய அபிராமி அம்மை பதிகம்

மிகையும்  துரத்த  வெம்பிணியும்  துரத்த 
          வெகுளியானதும்   துரத்த 
மிடியும்  துரத்த  நரைதிரையும்   துரத்தமிகு 
          வேதனைகளும்   துரத்த 
பகையும்   துரத்த  வஞ்சனையும்   துரத்தப் 
           பசியென்பதும்   துரத்தப் 
பாவம்  துரத்த  பதி  மோகம்  துரத்தப் 
          பல  காரியமும்  துரத்த 
நகையும்  துரத்த  ஊழ்  வினையும்  துரத்த 
         நாளும்  துரத்த   வெகுவாய் 
நாவறண்டோடி  கால்தளர்ந்திடும்  என்னை 
         நமனும்   துரத்தவானே
அகில  உலகங்கட்கும்  ஆதாரதெய்வமே!
        ஆதிகடவூரின்    வாழ்வே !
அமுதீசர்   ஒருபாகம்  அகலாத   சுகபாணி !
       அருள்வாமி !   அபிராமியே !      


கலையாத கல்வியும் குறையாத வயதுமோர்
     கபடு வாராத நட்பும்

கன்றாத வளமையுங் குன்றாத இளமையும்
       கழுபிணியிலாத உடலும்

சலியாத மனமும் அன்பு அகலாத மனைவியும்
       தவறாத சந்தானமும்

தாழாத கீர்த்தியும் மாறாத வார்த்தையும்
       தடைகள் வாராத கொடையும்

தொலையாத நிதியமும் கோணாத கோலும்

       ஒரு துன்பமில்லாத வாழ்வும்

துய்ய நின் பாதத்தில் அன்பும் உதவி பெரிய
       தொண்டரொடு கூட்டு கண்டாய்

அலையாழி அறிதுயிலு மாயனது தங்கையே!
       ஆதிகட வூரின் வாழ்வே!
அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி
       அருள்வாமி! அபிராமியே!


 

Samstag, 18. April 2020

வான்முகில் வழாது பெய்க


                                    கந்தபுராணம்            வாழ்த்துப்பா


வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க
மேன்மைகொள் சைவ நீதி விளங்குக உலக மெல்லாம்

Montag, 13. April 2020

தோடுடைய செவியன்


திருஞானசம்பந்தர் தேவாரம்

தோடுடையசெவி யன்விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
ஏடுடையமல ரான்முனை நாட்பணிந் தேத்தவருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

 

தோடு காதில் அணிந்து, எருதின் மேல் ஏறி, வெண்மையான மதியை சூடி, சுடு காட்டில் உள்ள சாம்பலை  உடல் எல்லாம் பூசி என் உள்ளத்தை கவர்ந்த கள்வன், தாமரை மலரின் மேல் அமர்ந்திருக்கும் பிரமன்(நான்முகன்) உம்மை அன்றொருநாள் பணிந்து துதிக்க, பிரம்மனுக்கு அருள் வழங்கி, பெருமை மிக்க பிரம்மாபுரத்தில் அமர்ந்து  இருக்கும் பெருமான்  இவனல்லவா!    ஏடு – தாமரை    பீடு – பெருமை