மாதாஆ....
மாதா பராசக்தி வையமெல்லம் நீ நிறைந்தாய்!
ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே!
- மாதா பராசக்தி
ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!
வேதாவின் தாயே…
வேதாவின் தாயே மிகப்பணிந்து வாழ்வோமே....
வாணி கலைத் தெய்வம் மணிவாக் குதவிடுவாள்
ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்
- வாணி கலைத் தெய்வம்
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்…
காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்
மாணுயர்ந்து நிற்பாள்….
மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே…..
பொன்னரசி நாரணனார் தேவி புகழ் அரசி
பொன்னரசி நாரணனார் தேவி புகழ் அரசி
மின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
அன்னையவள் வையமெல்லாம் ஆதரிப்பாள் ஸ்ரீதேவி
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே
தன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே!
மலையிலே தான்பிறந்தாள்…..
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்……..
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
மலையிலே தான்பிறந்தாள், சங்கரனை மாலையிட்டாள்,
உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,
நிலையில் உயர்ந்திடுவாள்……..
நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்
நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
நிலையில் உயர்ந்திடுவாள், நேரே அவள்பாதம்
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே.
Keine Kommentare:
Kommentar veröffentlichen