தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 28. April 2017

அழகான வடிவேலா


அரகரோகரா அரகரகரோகரா
அரகரோகரா அரகரகரோகரா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
மலைவேலா வடிவேலா
என் விழிதேடும் ஒளியாக வாரயோ மணிவேலா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
விதிகளில் உறங்கிடும் உயிரினை அறிந்தவன்
துயரத்தில் இவள் மனம் துடிப்பதை அறிவாய்
கனவுகள் ஒருபுறம் நினைவுகள் ஒருபுறம்
அலைவரும் மனதுக்கு அருள் புரிவாய்
அருள்வேலா அணிவேலா
கலங்கிடும் மனமதில் கவலைகள் கலைந்திட
உனஇரு திருவடி அடைக்கலம் தருவாய்
சுடும் வேல் தகிர்திடும் வழிகளை கடந்திட
சுடர் விடு நிழல் என துணை வருவாய்
மலைவேலா கதிர்வேலா

நன்றி - மௌனராகம் தொடர்





Mittwoch, 26. April 2017

ஓம் ஸ்ரீ ஜெய சக்தி

ஓம் ஜெய ஜெய ஜெய சக்தி - ஓம் ஸ்ரீ
ஜெய ஜெய ஜெய சக்தி
ஜெய ஜெய  என தினம் பாடி பணிந்தோம்
ஜெகமெங்கும் அமைதியை தா.
                                                   ----- -----(ஓம் ஸ்ரீ
திருப்தியும் இன்பமும் வாழ்வில் துலங்க
தேவை யெல்லாம் அடைய  - அம்மம்மா  
தேவையெல்லாம் அடைய
பக்தி பெருகிட பாடி உருகிட
பணிப்பாய் அன்பில் எமை    
                                         ------------- - (ஓம் ஸ்ரீ
இரண்டுகள் போக மூன்றுகள் அகல
ஈஸ்வரி வரம் அருள்வாய் - அம்மம்மா  
ஈஸ்வரி வரம் அருள்வாய்
கரங்குவித்தோம் இனி காலை விடோமடி
கருணையுடன் அணைப்பாய்  
                                           --------------- (ஓம் ஸ்ரீ
காசினில் எங்கும் வேற்றுமை போக
கருத்தினில் அன்பருள்வாய் - அம்மம்மா 
கருத்தினில் அன்பருள்வாய்
தேஜசுடன் வாழ காட்டடி காட்சி
தேவி உன் அடைக்கலமே
                                                   -------------(ஓம் ஸ்ரீ
நமஸ்காரம் இருவினை கரத்தினில்ஞான  
நல்லொளி தீபம் வைத்து
ஞான   நல்லொளி தீபம் வைத்து
 நமஸ்காரம் செய்து ஆரத்தி செய்தோம்
ஞாலத்துக்கு அமைதியை தா.  
                                                  --------------(ஓம் ஸ்ரீ
 ஓம் கணபதி சாய் ஷண்முக நாதா 
ஓம் த்ரிகுண தீதா கிருஷ்ணா 
ஓம் த்ரிகுண தீதா க்ருஷ்ணா
ஸ்ரீ ஹரி ஓம் த்ரிகுண  தீதா கிருஷ்ணா,
ஓம் ஸ்ரீ ராம மஹாதேவ சம்போ 
ஓம் ஜய ஜகத் ஜனனி  
                                           -----------------(ஓம் ஸ்ரீ


Donnerstag, 13. April 2017

சித்திரை வருடப் பிறப்பு

சித்திரை வருடப்பிறப்பு
சித்திரை மாதம் இளவேனில் முதல்  மாதமாகும். அக் காலத்தில் இராசிகளில் முதலாவதான மேட இராசியிலே சூரியன் பிரவேசிக்கின்றார். அவ் வேளையில் தமிழ்ப்புத்தாண்டுப் பிறப்புக் கொண்டாடப்படுகின்றது.
சித்திரைப் புத்தாண்டு பிறப்பு தினத்தில் பல வகையான மலர்கள் (தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ), இலைகள் (துளசி, வில்வம்), தளைகள், அறுகு, மஞ்சள், சுக்கு, திப்பிலி,  பால், கோசலம், கோமயம், கோரோசனை, பச்சைக்  கற்பூரம்,   ஆகியவற்றையும் சேர்த்து அவிக்கின்ற விசேட நீர்  மருத்துநீர் என ஆலயங்களில் வழங்கப்படும். அதனை மக்கள் தலைக்கு தேய்த்து நீராடி புதிய ஆடை அணிவர். ஆலய தரிசனம் செய்து பெற்றோரை வணங்கி ஆசி பெறுவார். பின்னர் உற்றார் உறவினருடன் விஷேடமாக சமைக்கப்பட்ட உணவு உண்டு மகிழ்வர்.
புத்தாண்டு தினத்தில் அந்த ஆண்டு பலனை வாசிப்பதும் கேட்பதும் வழக்கமாகும். குறித்த கைவிசேட சுபநேரத்தில் கைவிசேடம் பரிமாறுவதன் மூலம் அவ் ஆண்டில் பணப்பெருக்கம் உண்டாகும் என்று சைவர்கள் நம்புகின்றனர்.
இயற்கையில் நடைபெறும் மாற்றங்கள் யாவும் சூரியனின் நிலையை அடிப்படையாகக்கொண்டு கணிக்கப்படுகின்றன. அன்றியும் சூரியன் உதிப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் பொருட்டு, வீடு, வாசல் அனைத்தும் துப்பரவு செய்யப்பட்டு அன்று சூரியனுக்கு பொங்கிப் படைக்கும் வழக்கம் நிலவி வருகின்றது.

Sonntag, 9. April 2017

பங்குனி உத்திரம்

                    பங்குனி உத்திரம்
பங்குனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் கூடிய பௌர்ணமி தினத்தில் இறைவன், இறைவியைத் திருமணம் செய்த நாளாகப் போற்றப்படுகின்றது. இத் தினத்தில் பார்வதியை பரமேஸ்வரன் திருமணம் செய்தார். முருகப்பெருமான் தெய்வானையை திருமணம் செய்தார். இராமர் சீதையை மணமுடித்தார். திருவரங்கநாதர் ஆண்டாளை திருமணம் செய்தார்.  திருபாற்கடலில் இருந்து செல்வத்தை தருகின்ற இலட்சுமிதேவி வெளிப்பட்ட நாளும் பங்குனி உத்திரமாகும். இதனால் இவ் விரதம் கல்யாண விரதம் என அழைக்கப்படும். சிவன், முருகன், பெருமாள் ஆலயங்களில் தெய்வங்களுக்கு திருமண விழா நடைபெறும். பங்குனி உத்தரத்தில் ஐயப்பன் அவதரித்ததால் ஐயப்பன் ஆலயங்களில் விசேட பூஜைகள் இடம்பெறும்.
பங்குனி உத்திரம் தினத்தில் கன்னிப்பெண்கள் சிவ விரதமான கல்யாணசுந்தரர் விரதத்தை அனுஷ்டித்து கல்யாணசுந்தர மூர்த்தியை வழிபடுவர். இதனால் திருமணங்கள் கைகூடும் என்பது நம்பிக்கை.