தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 8. Mai 2020

என்ன வரம் கேட்பேன் நானே


என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

என்ன வரம் கேட்பேன் நானே - என்

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

 

புகழை நான் வேண்டவா  பொருளை நான் வேண்டவா

நல்ல பண்பை நான் வேண்டவா

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே

என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

 

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகனும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியனும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கனும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டனும்

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும் ஆ.....

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும்

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கனும்

மதங்கள் எனும் மலைகள், ஜாதி எனும் தடைகள் கடந்திட

 ஐயன் உன் அருளினை நான் பெறவே

                                                                              (என்ன வரம், வேறென்ன வரம் ...

 

 பறவையாக நான் பிறந்தால் கருடனாக ஆகனும்

 திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகனும்

 மலராக நான் பிறந்தால் கமலமாகப் பூக்கனும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டனும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும் ஆ.....

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும்

பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றனும்

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணம்

                                                             (என்ன வரம், வேறென்ன வரம் ...


Keine Kommentare:

Kommentar veröffentlichen