தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 26. Mai 2020

கடவுள் தந்த அழகிய வாழ்வு


கடவுள் தந்த அழகிய வாழ்வு
உலகம் முழுதும் அவனது வீடு
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…...
கருணை பொங்கும் உள்ளங்கள் உண்டு
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழனும் நூறு ஆண்டு.....
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம்
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம்

அழகே பூமியின் வாழ்கையை

அன்பில்... வாழ்ந்து... விடைப்பெறுவோம்....

        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............


பூமியில்... பூமியில்.. ..

இன்பங்கள் என்றும் குறையாது.....
வாழ்க்கையில்...... வாழ்க்கையில்……

எனக்கொன்றும் குறைகள் கிடையாது
எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஓ..

எது வரை வாழ்க்கை அழைக்கிறதோ
அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் நேரம் வரும் போதும்

சிரிப்பினில் நன்றி சொல்லிடுவோம்

பரவசம்.... இந்த பரவசம்.....
என்னாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே.....
        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............

நாமெல்லாம்.... சுவாசிக்க....
தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்….. மேகங்கள்.....
இடங்களைப் பார்த்து பொழியாது…
கோடையில் இன்று இலையுதிரும் ….
வசந்தங்கள் நாளை திரும்பி வரும்
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்.....
குயில்களின் பாட்டு காற்றில் வரும்
முடிவதும் பின்பு தொடர்வதும்
இந்த வாழ்கை சொல்லும்

பாடங்கள் தானே...... கேளடி
        (கடவுள் தந்த அழகிய வாழ்வு..............




 


Freitag, 8. Mai 2020

என்ன வரம் கேட்பேன் நானே


என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

என்ன வரம் கேட்பேன் நானே - என்

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே

 

புகழை நான் வேண்டவா  பொருளை நான் வேண்டவா

நல்ல பண்பை நான் வேண்டவா

இவை யாவும் கலந்த நீ ஈசன் மகனல்லவா!

என்ன வரம், வேறென்ன கேட்பேன் நானே

என்ன வரம் கேட்பேன் நானே

மனமறிந்து அருளும் சபரீஸ்வரனே...!

 

வானத்தில் நானிருந்தால் மேகமாக ஆகனும்

சபரிமலை மேல் தவழ்ந்து மழையாகப் பொழியனும்

கடலுக்குள் நான் பிறந்தால் முத்துக்கள் சேர்க்கனும்

முத்துக்கள் கோர்த்து வந்து ஐயனுக்கு சூட்டனும்

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும் ஆ.....

மனிதனாகப் பிறந்து விட்டேன்  எப்படி நான் வாழனும்

இசை என்னும் மந்திரக்கோலால் மதங்களை நான் சேர்க்கனும்

மதங்கள் எனும் மலைகள், ஜாதி எனும் தடைகள் கடந்திட

 ஐயன் உன் அருளினை நான் பெறவே

                                                                              (என்ன வரம், வேறென்ன வரம் ...

 

 பறவையாக நான் பிறந்தால் கருடனாக ஆகனும்

 திருவாபரணப்பெட்டி மேலே காவலுக்குப் போகனும்

 மலராக நான் பிறந்தால் கமலமாகப் பூக்கனும்

ஐயன் பாதகமலம் சேர்ந்து சரணாகதி வேண்டனும்

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும் ஆ.....

காற்று மண்டலத்தில் எங்கும் உன் புகழைப் பாடனும்

பேரசை என்றபோதும் ஐயன் நிறைவேற்றனும்

மரணம் வரும் தருணம் வரையில் இசைப்பயணம்

தொடர்ந்திட அடியவன் நின் திருவடி சரணம்

                                                             (என்ன வரம், வேறென்ன வரம் ...


Montag, 4. Mai 2020

வேலுண்டு வினையில்லை



வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை

குகனுண்டு குறையில்லை மனமே

கந்தனுண்டு கவலையில்லை மனமே

                                    (முருகன்-வேலுண்டு

நீலகண்டன் நெற்றிக் கண்ணில்  நெருப்பு வடிவாகத் தோன்றி

நிருதர் குலத்தை அழித்த நிர்மலன்முருகன்

வேலவனே என்றுதினம்  வேண்டிடும் அடியவர்க்கு

வேண்டும் வரம் தந்திடுவான் பாருமே

                                    (முருகன்-வேலுண்டு.

உலகமென்னும் கடல் தனிலே  உடல் என்னும் ஓடமது

உன்னடிக் கரை அடைய அருளுவாய் - முருகா

நெற்றியிலே நீறணிந்து  நெறியாக உனை நினைந்து

பற்றினேன் உள்ளமதில் உன்னடி – முருகா

                                    (முருகன்-வேலுண்டு

ஆறுபடை வீட்டினிலே  ஆறுமுக வேலவனே

ஆதரித்து என்னை ஆளும் ஐயனே

வடிவேலா என்று தினம்  வாழ்த்துகின்ற அடியவர்க்கு

கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே

                                    (முருகன்-வேலுண்டு

விழிகளொரு பன்னிரண்டு  உடையவனே என்று சொல்லி

விழிகளிலே நீர் பெருக்கி நின்றேன்

கருணையே வடிவமான  கந்தசாமித் தெய்வமே - உன்

கழலடியைக் காட்டி என்னை ஆளுவாய் – கந்தனே

                                    (முருகன்-வேலுண்டு

திருப்புகழைப் பாடி உந்தன்  திருவடியைக் கைதொழுது

திருவருளைப் பெற்றிட நான் வந்தேன் – முருகா

கந்தர் அநுபூதி பாடி  கந்தனே உன் கழலடியைக்

கைதொழுது கரைசேர வந்தேன்

                                    (முருகன்-வேலுண்டு

 

நெஞ்சமதில் வஞ்சமின்றி  நிர்மலனே நின்னடியைத்

தஞ்சமென நெஞ்சமதில் எண்ணினேன் - முருகா

மந்திரமும் தந்திரமும்  மருந்துமாக நின்ற உந்தன்

மலரடியைக் காணவேதான் வந்தேன்

                                    (முருகன்-வேலுண்டு

தெள்ளு தினை மாவும்  தேனும் பரிந்தளித்த

வள்ளிக்கு வாய்த்தவனே முருகா

பரங்குன்று செந்திலும்  பழனி மலை ஏரகம்

பலகுன்று பழமுதிரும் சோலையாம்

                                    (முருகன்-வேலுண்டு

ஓயாது ஒழியாது  உன் நாமம் சொல்பவர்க்கு

உயர் கதிதான் தந்திடுவாய் முருகா – குமரா

வடிவேலா என்று தினம்  வாழ்த்துகின்ற அடியவர்க்கு

கொடிய வினை தீர்த்திடுவான் பாருமே!

                                    (முருகன்-வேலுண்டு