தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Freitag, 23. Oktober 2020

சரஸ்வதியே சரஸ்வதியே



சரஸ்வதியே சரஸ்வதியே

சகலகலாவல்லி சரஸ்வதியே

நவராத்திரி கடைசி நாள் மூன்று

நாமகள் உனக்கே உகந்ததென்று

அவனியேதொழுதிடும் அன்னைஎன்று

அம்மா உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

ஆசன மலரோ வெண்மை நிறம்

அம்ச வாகனமும் வெள்ளை நிறம்

பூசனை மலர்கள் வெண்தாமரை

பூரணி உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

 

ஜெபித்திடும் மாலை வெள்ளை நிறம்

ஜெகஜெனனி உள்ளம் பிள்ளை மனம்

தவ முனிவோர்கள் தாங்கும் பதம்

தாரணி உன்னையே போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

கலைகளை வழங்கிடும் மலர் மாது

கலைக்கொடி ஞா பெருமாட்டி

விலையில்லா வித்தியா பனுவலாட்சி

வேணியே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

ஞானங்களை தரும் ஞானாம்பாள்

நற்கலை செல்வி வித்தியம்பாள்

மோனம் செய்வாள் மலர்மேலே

சரஸ்வதியே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

முப்பெரும் தேவியில் நடுப்பாகம்

முதல்வி உன்னக்கொரு நமஸ்காரம்

கற்பதும் கேட்பதும் உன்னாலே

கலைமகளே உன்னை போற்றுகிறோம்

             (சரஸ்வதியே சரஸ்வதியே

                            பாடியவர்: jeyasri 

                          எழுதியவர் : Lenka

நன்றி : kala Vasanthan

 

 

 

 


Keine Kommentare:

Kommentar veröffentlichen