தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Samstag, 26. Januar 2019

பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும்



பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும்

உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் ஆ.....

கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

 

இன்னும் பற்பல நாளிருந்தாலும்

இக்கணந்தனிலே இறந்தாலும்
துன்னும் வான்கதிக்கே புகுந்தாலும்

சோர்ந்து மா நரகத்துழன்றாலும்

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
என்னமேலும் இங்கு எனக்கு வந்தாலும்
எம்பிரான் எனக்கு யாது செய்தாலும்

நன்னர் நெஞ்சகம் நாடி நின்றோங்கும்

 
நமச்சிவாயத்தை நான் மறவேனே

       (பெற்ற தாய் தனை மக மறந்தாலும்
நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே

நமச்சிவாயத்தை நான் மறவேனே



Donnerstag, 24. Januar 2019

திருவருட்பா - தெய்வமணிமாலை

தெய்வ மணிமாலை திருவருட்பா
 
ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற  
  உத்தமர் தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்
  உறவு கலவாமை வேண்டும்
பெருமைபெறும் நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
  பேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
  பிடியா திருக்க வேண்டும்
 
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
  மறவா திருக்க வேண்டும்
மதி வேண்டும் நின்கருணை நிதி வேண்டும் நோயற்ற
  வாழ்வு நான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையிற் கந்தகோட்டத்துள் வளர்
  தலமோங்கு கந்த வேளே!
தண்முகத் துய்யமணி ண்முகச் சைவமணி
  சண்முகத் தெய்வ மணியே!
                       ------- வள்ளலார் இராமலிங்க அடிகளார்