மாசி மகம்
கும்பராசியில் சூரியன்
இருக்கும்போது சந்திரன் சிம்மராசியில் மக நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்வார். இந்நாளே
மாசி மாதத்தில் மக நட்சத்திரம் பௌர்ணமியோடு
சேர்ந்து வரும் மாசி மகமாக கொண்டாடப்படுகின்றது. முன்பு ஒருகாலத்தில் வருணபகவானைப் பிடித்த பிரமஹத்தி, அவரை கடலுக்குள் ஒழித்து
வைத்திருந்தது. வருணபகவான்
சிவபெருமானை வேண்ட, சிவனும் அவனைக் காப்பாற்றினார். . அவனை விடுவித்த தினம் மாசிமகம் ஆகும். அப்போது வருணன் சிவபெருமானிடம்,
அன்றையதினத்தில் கடலில் புண்ணிய தீர்த்தமாடுவோரின் பாவங்களை நீக்கி அருளுமாறு
வேண்டினான். சிவபெருமானும் அவ்வாறே வரமளித்தார்.
வருணனைப் பிடித்த தோஷம் நீங்கிய
நாளாக கொண்டாடடப்படுகிறது. அன்றையதினம் கடலாடும் தினமாகும். பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்து துன்பத்தில்
உள்ளோர் ஆன்மாவானது இறைவனது அருட்கடலாகிய இன்பவெள்ளத்தில் அமிழ்ந்து
திளைக்கச் செய்யும் நன்நாளே மாசிமகக் கடலாடு தீர்த்தமாகும்.
உமாதேவியாராகிய பார்வதிதேவி
காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலப்புரி சங்காக, தக்கன் மகளாக, தாட்சாயினியாக
அவதரித்த திருநாளும் இதே நாள் எனக்
கூறப்படுகிறது.
பாதாளத்தில் இருந்த பூமியை,
விஷ்ணு பன்றி(வராக) வடிவம் எடுத்து அசுரர்களுடன் போர் புரிந்து, கடலுக்கு
அடியிலிருந்து பூமியை வெளியே கொண்டு வந்த தினமும் மாசி மகமாகும்.
முருகப்பெருமான்
தந்தையராகிய சிவபெருமானுக்கு சுவாமிமலையில், ஒம் என்னும் பிரணவ மந்திர உபதேசம் செய்த நாள் மாசி மகம் ஆகும்.
மேலும் வியாழ பகவான் மக
நட்சத்திரத்துடன் கூடிய சிம்மராசிக்கு செல்லும் புண்ணிய காலம் மகா மகம் எனப்படும்.
இது பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். தமிழ்நாட்டில் கும்பகோணத்தில் கும்பேசுவரர் கோயிலில் மகா
மகம் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்று யமுனை, சரசுவதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி போன்ற 12 நதிகள், மக்களுடைய
பாவச்சுமைகளை கழுவி அகற்றி புனிதம் பெற அங்கு வருவதாக நம்பப்படுகின்றது. வரும் நதியில் எல்லோரும் கடலில் நீராடி நற்பேறு பெறுவர்.
நன்றி ஸ்ரீதணிகை
இலங்கையில் உள்ள சக்தி ஆலயங்களில்
ஒன்றான மாத்தளை முத்து மாரியம்மன் ஆலயத்தில் இத் தினத்தில் தேர்த்திருவிழா
நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.