தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Samstag, 30. Juni 2018

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்

சத்தியம், சிவம், சுந்தரம் ஆஆஆ....
சரவணன் திருப்புகழ் மந்திரம் ம் ம் ம்...

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன்
அவன் ஆலயத்தில் அன்பு மலர் பூசை வைத்தேன்
(அழகன் முருகனிடம்)
அண்ணல் உறவுக்கென்றே உடல் எடுத்தேன் - அவன்
அருளைப் பெறுவதற்கே உயிர் வளர்த்தேன்!
(அண்ணல் உறவுக்கென்றே)
………… ……..
(
அழகன் முருகனிடம்)

பனி பெய்யும் மாலையிலே, பழமுதிர் சோலையிலே, (2)
கனி கொய்யும் வேளையிலே, கன்னி மனம் கொய்து விட்டான் (2)
பன்னிரெண்டு கண்ணழகைப் பார்த்திருந்த பெண்ணழகை(2)
வள்ளல் தான் ஆளவந்தான், பெண்மையை வாழ வைத்தான்
பெண்மையை வாழ வைத்தான் ………… ……..
(
அழகன் முருகனிடம்)

மலை மேல் இருப்பவனோ, மயில் மேல் வருபவனோ (2)
மெய்யுருக பாடி வந்தால் தன்னைத் தான் தருபவனோ (2)
அலை மேல் துரும்பானேன், அனல் மேல் மெழுகானேன்(2)
அய்யன் கை தொட்டவுடன் அழகுக்கு அழகானேன்
அழகுக்கு அழகானேன் ஆ…..……
(
அழகன் முருகனிடம்)