தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 19. Dezember 2017

காலை தூக்கி நின்றாடும் தெய்வமே

பல்லவி
 
காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னை கை தூக்கி ஆள் தெய்வமே
 
அனுபல்லவி

வேலை தூக்கும் பிள்ளை தனை பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன் அம்பலத்தில் ஒரு
 
சரணம் 1

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கதித்த  சடைமேல் தூக்கி
இங்கும் அங்குமாய் தேடி இருவர் கண்டறியாத
 
சரணம்2

நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்து வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


Dienstag, 12. Dezember 2017

முத்தான முத்துக்குமார வா

முத்தான முத்துக்குமரா
முருகையா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா

முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா

நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா

மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
 
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
 
பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து

நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா