தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Donnerstag, 16. November 2017

பச்சை மயில் வாகனனே முருகா


பச்சை மயில் வாகனனே 

பச்சைமயில் வாகனனே சிவ 

 பாலசுப்ரமணியனே வா முருகா

 

 பச்சை மயில் வாகனனே - சிவ

பால சுப்பிரமணியனே வா - இங்கு 

இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன் 

 எள்ளளவும் ஐயமில்லை -   (பச்சைமயில்)

 

கொஞ்சும் மொழியானாலும் - உன்னைக் 

கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு 

 

சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும் 

 

சாந்தம் நீறைந்தப்பா - (பச்சைமயில்)

 

வெள்ளமது பள்ளந்தனிலே பாயும் 

 தன்மை போல உள்ளந்தனிலே - நீ 

 

மெள்ள மெள்ள புகுந்து விட்டாய் - எந்தன் 

 

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சைமயில்) 

 

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு

 நேர்மை என்னும் தீபம் வைத்தேன் - நீ 

 

செஞ்சிலம்பை கொஞ்சிடவே வா - முருகா 

சேவற்கொடி மயில் வீரா - (பச்சைமயில்) 

 

ஆறுபடை வீடுடையவா எனக்கு 

ஆறுதலைத் தருந் தேவா - நீ 

 

ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா 

 எங்கும் நிறைந்தவனே- (பச்சைமயில்) 

 

அலைகடல் ஓரத்திலே எங்கள் 

  அன்பான சண்முகனே - நீ 

அலையா மனந் தந்தாய் - உனக்கு 

  அனந்த கோடி நமஸ்காரம்

 

பச்சைமயில் வாகனனே சிவ     

 பாலசுப்பிரமணியனே வா - இங்கு

இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்      

எள்ளளவும் ஐயமில்லையே


 


Samstag, 11. November 2017

அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா








அரகரோகரா அரகரகரோகரா
அரகரோகரா அரகரகரோகரா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
மலைவேலா வடிவேலா
என் விழிதேடும் ஒளியாக வாரயோ மணிவேலா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
விதிகளில் உறங்கிடும் உயிரினை அறிந்தவன்
துயரத்தில் இவள் மனம் துடிப்பதை அறிவாய்
கனவுகள் ஒருபுறம் நினைவுகள் ஒருபுறம்
அலைவரும் மனதுக்கு அருள் புரிவாய்
அருள்வேலா அணிவேலா
கலங்கிடும் மனமதில் கவலைகள் கலைந்திட
உனஇரு திருவடி அடைக்கலம் தருவாய்
சுடும் வேல் தகிர்திடும் வழிகளை கடந்திட
சுடர் விடு நிழல் என துணை வருவாய்
மலைவேலா கதிர்வேலா

நன்றி - மௌனராகம் தொடர்

Donnerstag, 2. November 2017

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
                          (இருக்கும் இடத்தை….

உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ…................
உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை……
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே.. ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை….
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ…...............
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை………
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….................
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை….