தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 19. Dezember 2017

காலை தூக்கி நின்றாடும் தெய்வமே

பல்லவி
 
காலை தூக்கி நின்று ஆடும் தெய்வமே என்னை கை தூக்கி ஆள் தெய்வமே
 
அனுபல்லவி

வேலை தூக்கும் பிள்ளை தனை பெற்ற தெய்வமே
மின்னும் புகழ்சேர் தில்லை பொன் அம்பலத்தில் ஒரு
 
சரணம் 1

செங்கையில் மான் தூக்கி சிவந்த மழுவும் தூக்கி
அங்கத்தில் ஒரு பெண்ணை அனுதினமும் தூக்கி
கங்கையை திங்களை கதித்த  சடைமேல் தூக்கி
இங்கும் அங்குமாய் தேடி இருவர் கண்டறியாத
 
சரணம்2

நந்தி மத்தளம் தூக்க நாரதர் யாழ் தூக்க
தோம் தோம் என்றயன் தாளம் சுருதியோடு தூக்க
சிந்தை மகிழ்ந்து வானோர் சென்னி மேல் கரம் தூக்க
முந்து வலியுடைய முயலகன் உன்னைத் தூக்க


Dienstag, 12. Dezember 2017

முத்தான முத்துக்குமார வா

முத்தான முத்துக்குமரா
முருகையா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா

முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா

நீ ஆடும் அழகைக் கண்டு
வேலாடி வருகுதைய்யா
வேலாடும் அழகைக் கண்டு
மயிலாடி மகிழுதையா

மயிலாடும் அழகைக் கண்டு
மனமாடி மகிழுதையா
மனமாடும் அழகைக் கண்டு
மக்கள் கூட்டம் ஆடுதையா
 
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா
 
பன்னீரால் குளிக்க வைத்து
பட்டாடை உடுத்தி வைத்து
சந்தனத்தால் சாந்தெடுத்து
அங்கமெல்லாம் பூசி வைத்து

நீர் பூசி திலகம் வைத்து
நெஞ்சத்தில் உன்னை வைத்து
அன்று பூத்த மலராள் உன்னை
அர்ச்சிப்போம் வருவாயப்பா
முத்தான முத்துக் குமரா
முருகையா வா வா வா
சித்தாடும் செல்வக்குமரா
சிந்தை மகிழ வா வா வா


Donnerstag, 16. November 2017

பச்சை மயில் வாகனனே முருகா


பச்சை மயில் வாகனனே 

பச்சைமயில் வாகனனே சிவ 

 பாலசுப்ரமணியனே வா முருகா

 

 பச்சை மயில் வாகனனே - சிவ

பால சுப்பிரமணியனே வா - இங்கு 

இச்சை இல்லாம் உன்மேல் வைத்தேன் 

 எள்ளளவும் ஐயமில்லை -   (பச்சைமயில்)

 

கொஞ்சும் மொழியானாலும் - உன்னைக் 

கொஞ்சிக் கொஞ்சிப் பாடிடுவேன் - இங்கு 

 

சர்ச்சை எல்லாம் மறைந்ததப்பா - எங்கும் 

 

சாந்தம் நீறைந்தப்பா - (பச்சைமயில்)

 

வெள்ளமது பள்ளந்தனிலே பாயும் 

 தன்மை போல உள்ளந்தனிலே - நீ 

 

மெள்ள மெள்ள புகுந்து விட்டாய் - எந்தன் 

 

கள்ளமெல்லாம் கரைந்ததப்பா - (பச்சைமயில்) 

 

நெஞ்சமதில் கோவில் அமைத்தேன் அங்கு

 நேர்மை என்னும் தீபம் வைத்தேன் - நீ 

 

செஞ்சிலம்பை கொஞ்சிடவே வா - முருகா 

சேவற்கொடி மயில் வீரா - (பச்சைமயில்) 

 

ஆறுபடை வீடுடையவா எனக்கு 

ஆறுதலைத் தருந் தேவா - நீ 

 

ஏறுமயில் ஏறிவருவாய் - முருகா 

 எங்கும் நிறைந்தவனே- (பச்சைமயில்) 

 

அலைகடல் ஓரத்திலே எங்கள் 

  அன்பான சண்முகனே - நீ 

அலையா மனந் தந்தாய் - உனக்கு 

  அனந்த கோடி நமஸ்காரம்

 

பச்சைமயில் வாகனனே சிவ     

 பாலசுப்பிரமணியனே வா - இங்கு

இச்சைஎல்லாம் உன்மேலே வைத்தேன்      

எள்ளளவும் ஐயமில்லையே


 


Samstag, 11. November 2017

அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா








அரகரோகரா அரகரகரோகரா
அரகரோகரா அரகரகரோகரா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
மலைவேலா வடிவேலா
என் விழிதேடும் ஒளியாக வாரயோ மணிவேலா
அழகான உன் பாதம் தொழுகின்றேன் வடிவேலா
அடிநெஞ்சின் துன்பங்கள் அறியாயோ வடிவேலா
விதிகளில் உறங்கிடும் உயிரினை அறிந்தவன்
துயரத்தில் இவள் மனம் துடிப்பதை அறிவாய்
கனவுகள் ஒருபுறம் நினைவுகள் ஒருபுறம்
அலைவரும் மனதுக்கு அருள் புரிவாய்
அருள்வேலா அணிவேலா
கலங்கிடும் மனமதில் கவலைகள் கலைந்திட
உனஇரு திருவடி அடைக்கலம் தருவாய்
சுடும் வேல் தகிர்திடும் வழிகளை கடந்திட
சுடர் விடு நிழல் என துணை வருவாய்
மலைவேலா கதிர்வேலா

நன்றி - மௌனராகம் தொடர்

Donnerstag, 2. November 2017

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி


இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
                          (இருக்கும் இடத்தை….

உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே ஏ…................
உன்னையே நினைத்திருப்பான் உண்மையே தான் உரைப்பான்
ஊருக்கு பகையாவான் ஞானத்தங்கமே
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை……
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
நஞ்சினை நெஞ்சில் வைத்து நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான் ஞானத்தங்கமே
அவன் நாடகம் என்ன சொல்வேன் ஞானத்தங்கமே.. ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை….
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே ஏ…...............
தொண்டுக்கென்றே அலைவான் கேலிக்கு ஆளாவான்
கண்டுக்கொல்வாய் அவனை ஞானத்தங்கமே
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை………
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே ஏ….................
பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான் ஞானத்தங்கமே
அவன்தான் தரணியை படைத்தாண்டி ஞானத்தங்கமே ஞானத்தங்கமே
                             (இருக்கும் இடத்தை….
 


Sonntag, 29. Oktober 2017

சொல்லடி அபிராமி



மணியே! மணியின் ஒளியே! ஒளிரும் அணிபுனைந்த
அணியே! அணியும் அணிக்கழகே! அணுகாதவர்க்குப்
பிணியே! பிணிக்கு மருந்தே! அமரர் பெரும் விருந்தே
பணியேன் ஒருவரை நின் பத்மபாதம் பணிந்த பின்னே.

சொல்லடி அபிராமி சொல்லடி அபிராமி - வானில்

சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி வானில்

சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ?
பதில் சொல்லடி அபிராமி

நில்லடி முன்னாலே நில்லடி முன்னாலே - முழு

நிலவினைக் காட்டு உன் கண்ணாலே

                                                                     ( சொல்லடி அபிராமி
….

பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி

படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ?
பல்லுயிரும் படைத்த பரமனுக்கே - சக்தி

படைத்ததெல்லாம் உன்தன் செயலல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - நீ
சொல்லுக்கெல்லாம் சிறந்த சொல்லல்லவோ? - இந்த
சோதனை எனக்கல்ல உனக்கல்லவோ?

                                                                      (சொல்லடி அபிராமி
……

வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?
வாராயோ ஒரு பதில் கூறாயோ? - நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?

வானம் இடிபடவும் பூமி பொடிபடவும்

நடுவில் நின்றாடும் வடிவழகே
கொடிகளாட முடிகளாட குடிபடை
எழுந்தாட வரும் கலையழகே
பிள்ளை உள்ளம் துள்ளும் வண்ணம் பேரிகை
கொட்டி வர மத்தளமும் சத்தமிட

வாராயோ ஒரு பதில் கூறாயோ நிலவென

வாராயோ அருள் மழை தாராயோ
?

செங்கையில் வண்டு கலிம் கலிம் என்று

ஜெயம் ஜெயம் என்றாட - இடை
சங்கதமென்று சிலம்பு புலம்பொடு
தண்டை கலந்தாட - இரு

கொங்கை கொடும்பகை வென்றனமென்று
குழைந்து குழைந்தாட - மலர்ப்
பங்கயமே உனைப் பாடிய பிள்ளை முன்
நிலவு எழுந்தாட

விரைந்து வாராயோ எழுந்து வாராயோ
கனிந்து வாராயோ

காளி பயங்கரி சூலி மதாங்கினி கண்களில் தெரிகின்றாள்

கண்கள் சிவந்திடும் வண்ணம் எழுந்தொரு காட்சியைத் தருகின்றாள்
வாழிய மகன் இவன் வாழிய என்றொரு வாழ்த்தும் சொல்கின்றாள்
வானகம் வையகம் எங்கணுமே ஒரு வடிவாய்த் தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
அன்னை தெரிகின்றாள் என் அம்மை தெரிகின்றாள்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்