தமிழ்கமலம்

தமிழ்கமலம்
காலமாற்றத்தோடு எமது பயணம்

Dienstag, 17. November 2020

கந்த சஷ்டிக் கவசம் – ஆறாம் படை வீடு – பழமுதிர்சோலைக் கிழவோன்


கந்த சஷ்டிக் கவசம் – ஆறாம் படை வீடு – பழமுதிர்சோலைக் கிழவோன்

தேவராஜ சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந் தனை
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்
சங்கரன் மகனே! சரவண பவனே!
ஐங்கரன் துணைவனே! அமரர்தம் கோனே!
செங்கண்மால் மருகனே! தெய்வானை கேள்வனே!
பங்கயம் போன்ற பன்னிரு கண்ணனே!        
பழநி மாமலையுறும் பன்னிரு கரத்தனே!
அழகுவேல் ஏந்தும் ஐயனே சரணம்!
சரவணபவனே! சட்கோணத் துள்ளுறை
அரனருள் சுதனே! அய்யனே சரணம்!     
சயிலொளி பவனே! சடாட்சரத் தோனே!
மயில்வா கனனே! வள்ளலே சரணம்!
திரிபுர பவனே! தேவசே னாபதி
குறமகள் மகிழும் குமரனே சரணம்!        
திகழொளி பவனே! சேவல்கொடியாய்
நகமா யுதமுடை நாதனே சரணம்!
பரிபுர பவனே! பன்னிரு கையனே!
தருணமிவ் வேளை தற்காத் தருளே       
சவ்வும் ரவ்வுமாய்த் தானே யாகி

வவ்வும் ணவ்வுமாய் விளங்கிய குகனே!
பவ்வும் வவ்வுமாய் பழமுதிர் சோலையில்
தவ்வியே ஆடும் சரவணபவனே!        
குஞ்சரி வள்ளியைக் குலாவி மகிழ்வோய்
தஞ்ச மென்றுன்னைச் சரணம் அடைந்தேன்
கொஞ்சிய உமையுடன் குழவியாய்ச் சென்றங் (கு)
அஞ்சலி செய்தவள் அமுதமும் உண்டு   
கார்த்திகை மாதர் கனமார்(பு) அமுதமும்
பூர்த்தியாய் உண்ட புனிதனே குகனே!
நவமைந்தர் சிவனால் நலமுடன் உதிக்கத்
தவமுடை வீரவாகுவோ(டு) ஒன்பான்        
தம்பிமா ராகத் தானையைக் கொண்ட
சம்பிர தாயா சண்முகா வேலா!
நவவீரர் தம்முடன் நவகோடி வீரரும்
கவனமாய் உருத்திரன் அளித்தே களித்துப்      
பேதம் இல்லாமல் பிரமனைக் குருவாய்
ஓதிடச் செய்ய உடன் அவ் வேதனை
ஓமெனும் பிரணவத் துண்மைநீ கேட்க
தாமே யோசித்த சதுர்முகன் தன்னை        
அமரர்கள் எல்லாம் அதிசயப் படவே
மமதைசேர் அயனை வன்சிறை யிட்டாய்
விமலனும் கேட்டு வேக மதாக
உமையுடன் வந்தினி துவந்து பரிந்து      
அயனைச் சிறைவிடென் (று) அன்பாய் உரைக்க
நயமுடன் விடுத்த ஞானபண் டிதனே!
திருமால் அயன்சிவன் சேர்ந்து மூவரும்
கெளரி லட்சுமி கலைம களுடனே        
அறுவரோர் அம்சமாய் அரக்கரை வெல்ல
ஆறு முகத்துடன் அவதரித் தோனே
சிங்க முகாசுரன் சேர்ந்த கயமுகன்
பங்கமே செய்யும் பானு கோபனும்   
சூரனோ டொத்த துட்டர்க ளோடு
கோரமே செய்யும் கொடியராக் கதரை
வேருடன் கெல்லி விண்ணவர் துன்பம்
ஆறிடச் செய்தவ் வமரர்கள் தமக்குச்        
சேனா பதியாய்த் தெய்வீக பட்டமும்
தானாய்ப் பெற்ற தாட்டிகப் பெரும

திருப்பரங் குன்றம் செந்தூர் முதலாய்ச்
சிறப்புறு பழநி திருவேரக முதல்  
எண்ணிலாத் தலங்களில் இருந்தாடும் குகனே!
விண்ணவர் ஏத்தும் விநோத பாதனே!
அன்பர்கள் துன்பம் அகற்றியாள் பவனே!
தஞ்சமென்(று) ஓதினார் சமயம் அறிந்தங்(கு)        
இன்பம் கொடுக்கும் ஏழைபங் காளா
கும்பமா முனிக்குக் குருதே சிகனே
தேன்பொழில் பழனி தேவ குமாரா!
கண்பார்த்(து) எனையாள் கார்த்திகே யா ! என்      
கஷ்டநிஷ் டூரம் கவலைகள் மாற்றி
அஷ்டலட் சுமிவாழ் அருளெனக் குதவி
இட்டமாய் என்முன் இருந்து விளையாடத்
திட்டமாய் எனக்கருள் செய்வாய் குகனே!        
அருணகிரி தனக் (கு) அருளிய தமிழ்போல்
கருணையால் எனக்கு கடாட்சித் தருள்வாய்
தேவ ராயன் செப்பிய கவசம்
பூவல யத்தோர் புகழ்ந்து கொண்டாட     
சஷ்டி கவசம் தான்செபிப் போரைச்
சிஷ்டராய்க் காத்தருள் சிவகிரி வேலா!
வந்தென் நாவில் மகிழ்வுடன் இருந்து
சந்தத் தமிழ்த் திறம் தந்தருள் வோனே!       
சரணம் சரணம் சரஹண பவஓம்!
சரணம் சரணம் தமிழ் தரும் அரசே!
சரணம் சரணம் சங்கரன் சுதனே!
சரணம் சரணம் சண்முகா சரணம்!

 


நன்றிகள்: Youtube Video - SRE BAKTHI

 

 

Montag, 16. November 2020

கந்த சஷ்டிக் கவசம் – ஐந்தாம் படை வீடு – திருத்தணி

 



கந்த சஷ்டிக் கவசம் – ஐந்தாம் படை வீடு – திருத்தணி

குன்றுதோறாடும் குமரவேள்

தேவராஜ சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந் தனை
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.
நூல்

கணபதி துணைவா! கங்காதரன் புதல்வா!
குணவதி உமையாள்! குமர குருபரா!
வள்ளிதெய் வானை மருவிய நாயகா!
துள்ளிமயி லேறும் சுப்பிர மணியா!        !
அழகொளிப் பிரபை அருள்வடி வேலா
பழநி நகரில் பதியனு கூலா!
திருவா வினன்குடி சிறக்கும் முருகா!
அருள்சேர் சிவகிரி ஆறு முகவா! 

சண்முகநதியும் சர்பன்றி மலையும்
பன்முகம் நிறைந்த பழனிக்கு இறைவா!
ஆறாறு நூற்று அட்டமங் களமும்
வீரவை யாபுரி விளங்கும் தயாபரா !       
ஈராறு பழநி எங்கும் தழைக்கப்
பாராறு சண்முகம் பகரும் முதல்வா!

ஆறு சிரமும் ஆறு முகமும்

ஆறிரு புயமும் ஆறிரு காதும்   
வடிவம் சிறந்த மகரகுண் டலமும்
தடித்த பிரபைபோல் சார்ந்த சிந்தூரமும்
திருவெண் ணதீறணி திருநுதல் அழகும்
கருணைபொழியும் கண்ணான்கு மூன்றும்        
குனித்த புருவமும் கூரிய மூக்கும்
கனித்த மதுரித்த கனிவாய் இதழும்
வெண்ணிலாப் பிரபைபோல் விளங்கிய நகையும்
எண்ணிலா அழகாய் இலங்குபல் வரிசையும்   
காரிகை உமையாள் களித்தே இனிதெனச்
சீர்தரும் வள்ளி தெய்வநா யகியாள்
பார்த்தழ கென்னப் பரிந்த கபோலமும்
வார்த்த கனகம்போல் வடிவேல் ஒளியும்        
முறுக்குமேல் மீசையும் மூர்க்கம் சிறக்க
மறுக்கும் சூரர்மேல் வாதுகள் ஆட


ஈஸ்வரன் பார்வதி எடுத்து முத்தாடி
ஈஸ்வரன் வடிவை மிகக்கண் டனுதினம்   
கையால் எடுத்து கனமார்(பு) அணைத்தே
ஐயா! குமரா! அப்பனே! என்று
மார்பினும் தோளினும் மடியினும் வைத்துக்

 கார்த்திகே யாஎனக் கருணையால் கொஞ்சி
முன்னே கொட்டி முருகா வருகவென்(று)
அந்நேரம் வட்டமிட்டாடி விளையாடித்
தேவியும் சிவனும் திருக்கண் களிகூரக்
கூவிய மயிலேறும் குருபரா! வருக!        
தாவிய தகரேறும் சண்முகா! வருக!
ஏவியவே லேந்தும் இறைவா! வருக!
கூவிய சேவல் கொடியோய் வருக!
பாவலர்க் கருள்சிவ பாலனே !வருக!       
அன்பர்க் கருள்புரி ஆறுமுகா !வருக!
பொன்போல் சரவணைப் புண்ணியா! வருக!


அழகில் சிவனொளி அய்யனே! வருக!
கலபம் அணியுமென் கந்தனே! வருக       
மருமலர்க் கடம்பணி மார்பா! வருக
மருவுவோர் மலரணி மணியே! வருக
திரிபுர பவனெனும் தேவே! வருக!
பரிபுர பவனெனும் பவனே! வருக!         
சிவகிரி வாழ்தெய்வ சிகாமணி! வருக!
காலில் தண்டை கலீர் கலீரென
சேலில்சதங்கை சிலம்பு கலீரென
இடும்பனை மிதித்ததோர் இலங்கிய பாதமும்      
அடும்பல வினைகளை அகற்றிய பாதமும்
சிவகிரி மீதினில் திருநிறை கொலுவும்
நவகிரி அரைமேல் இரத்தினப் பிரபையும்
தங்கரை ஞாணும் சாதிரை மாமணி        
பொங்குமாந் தளிர்சேர் பொற்பீதாம் பரமும்
சந்திர காந்தச் சரிகைத் தொங்கலும்


மந்திரவாளும் வங்கிச் சரிகையும்
அருணோ தயம்போல் அவிர்வன் கச்சையும்       
ஒருகோடி சூரியன் உதித்த பிரபை போல்
கருணையால் அன்பரைக் காத்திடும் அழகும்
இருகோடி சந்திரன் எழிலொட்டி யாணமும்
ஆயிரம் பணாமுடி அணியுமா பரணமும்        
வாயில்நன் மொழியாய் வழங்கிய சொல்லும்
நாபிக் கமலமும் நவரோம பந்தியும்
மார்பில் சவ்வாது வாடை குபீரென
புனுகு பரிமளம் பொருந்திய புயமும்      
ஒழுகிய சந்தனம் உயர்கஸ்தூரியும்
வலம்புரி சங்கொலி மணியணி மிடறும்
நலம்சேர் உருத்திர அக்க மாலையும்
மாணிக்கம் முத்து மரகதம் நீலம்        
ஆணிவை டூரியம் அணிவைரம் பச்சை
பவளகோ மேதகம் பதித்தவச் ராங்கியும்


நவமணி பிரபைபோல் நாற்கோடி சூரியன்
அருணோ தயமெனச் சிவந்த மேனியும்       
கருணைபொழியும் கடாட்சவீட் சணமும்
கவசம் தரித்தருள் காரண வடிவும்
நவவீரர் தம்முடன் நற்காட்சி யான
ஒருகை வேலாயுதம் ஒருகை சூலாயுதம்        
ஒருகை நிறைசங்கு ஒருகை சக்ராயுதம்
ஒருகை நிறைவில்லு ஒருகை நிறையம்பு
ஒருகை மந்திரவாள் ஒருகை மாமழு
ஒருகை மேல்குடை ஒருகை தண்டாயுதம்      
ஒருகை சந்திராயுதம் ஒருகை வல்லாயுதம்
அங்கையில் பிடித்த ஆயுதம் அளவிலாப்
பங்கயக் கமலப் பன்னிரு தோளும்
முருக்கம் சிறக்கும் முருகா சரவணை        
இருக்கும் குருபரா ஏழைபங் காளா


வானவர் முனிவர் மகிழ்ந்துகொண் டாடத்
தானவர் அடியர் சகலரும் பணியப்
பத்திர காளி பரிவது செய்ய       
சக்திகள் எல்லாம் தாண்டவ மாட
அஷ்ட பைரவர் ஆனந்தமாட
துஷ்டமிகுஞ் சூளிகள் சூழ்திசை காக்க
சத்த ரிஷிகள் சாந்தக மென்னச்        
சித்தர்கள் நின்று சிவசிவா என்னத்
தும்புரு நாரதர் சூரிய சந்திரர்
கும்பமா முனியும் குளிர்ந்ததா ரகையும்
அயன்மால் உருத்திரன் அஷ்ட கணங்கள்      
நயமுடன் நின்று நாவால் துதிக்க
அஷ்ட லஷ்மி அம்பிகை பார்வதி
கட்டழகன் என்று கண்டுனை வாழ்த்த
இடும்பா யுதன்நின் இணையடி பணிய        
ஆடும் தேவகன்னி ஆலத்தி எடுக்க


தேவ கணங்கள் ஜெயஜெய என்ன
ஏவல் கணங்கள் இந்திரர் போற்ற
கந்தர்வர் பாடிக் கவரிகள் வீசிச்    
சார்ந்தனம் என்னச் சார்வரும் அநேக
பூதம் அடிபணிந் தேத்தவே தாளம்
பாதத்தில் வீழ்ந்து பணிந்துகொண் டாட
அரகர என்றடியார் ஆலவட்டம் பிடிக்க        
குருபரன் என்றன்பர் கொண்டாடி நிற்க
குடையும் சேவலின் கொடியும் சூழ
இடை விடாமல் உன் ஏவலர் போற்றச்
சிவனடி யார்கள் திருப்பாத மேந்த      
நவமெனும் நால்வரை ஏற்ற சரமண்டலம்
உருத்திர வீணை நாதசுர மேளம்
தித்திமி என்று தேவர்கள் ஆடச்
சங்கீத மேளம் தாளம் துலங்க        
மங்கள மாக வைபவம் இலங்க


தேவ முரசடிக்கத் தினமேள வாத்தியம்
சேவல் கொடியும் சிறப்புடன் இலங்க
நந்திகே சுவரன்மீது ஏறிய நயமும்       
வந்தனம் செய்ய வானவர் முனிவர்
எங்கள் பார்வதியும் ஈசனும் முன்வர
ஐங்கரன் முன்வர ஆறுமா முகவன்
வீரமயி லேறி வெற்றிவேல் எடுத்துச்        
சூரன்மேல் ஏவத் துடித்தவன் மடியச்
சிங்கமுகா சுரன் சிரமது உருளத்
துங்கக் கயமுகன் சூரனும் மாள
அடலறக் குலத்தை அறுத்துச் சயித்து     
விடுத்தவே லாயுதம் வீசிக்கொக் கரித்துத்
தம்ப மெனும் சயத் தம்பம் நாட்டி
அன்பர்கள் தம்மை அனுதினம் காத்துத்
திருப்பரங் குன்றம் சீர்பதி செந்தூர்        
திருவாவி நன்குடி திருவே ரகமும்


துய்ய பழநி சுப்பிர மணியன்
மெய்யாய் விளங்கும் விராலிமலைமுதல்
அண்ணா மலையும் அருள்மேவும் கயிலை  
கண்ணிய மாவூற்றுக் கழுகுமா மலையும்
முன்னிமை யோர்கள் முனிவர் மனத்திலும்
நன்னய மாய்ப்பணி நண்பர் மனத்திலும்
கதிர்காமம் செங்கோடு கதிர்வேங் கடமும்        
பதினா லுகத்திலும் பக்தர் மனத்திலும்
எங்கும் தானவ னாயிருந் (து) அடியர்தம்
பங்கி லிருந்து பாங்குடன் வாழ்க
கேட்ட வரமும் கிருபைப் படியே     
தேட்ட முடன் அருள் சிவகிரி முருகா!
நாட்டு சிவயோகம் நாடிய பொருளும்
தாட்டிக மாய்எனக்(கு) அருள்சண் முகனே!        
சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

 

நன்றிகள்: Youtube Video - SRE BAKTHI


கந்த சஷ்டிக் கவசம் – நாலாம் படை வீடு – சுவாமி மலை

 




கந்த சஷ்டிக் கவசம் – நாலாம் படை வீடு – சுவாமி மலை

திருவேரகத்துறை பெருமாள்

தேவராஜ சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந் தனை
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.


நூல்

ஓமெனும் பிரணவம் உரைத்திடச் சிவனார்
காமுற உதித்த கனமறைப் பொருளே
ஓங்கா ரமாக உதயத் தெழுந்தே
ஆங்கா ரமான அரக்கர் குலத்தை        
வேரறக் களைந்த வேலவா! போற்றி!
தேராச் சூரரைத் துண்டதுண் டங்களாய்
வேலா யுதத்தால் வீசி அறுத்த
பாலா! போற்றி! பழநியின் கோவே!       
நான்கு மறைகள் நாடியே தேடும்
மான் மருகோனே! வள்ளி மணாளனே!
நானெனும் ஆணவம் நண்ணிடா(து) என்னை
காணநீ வந்து காப்பதுன் கடனே        
காளி கூளி கங்காளி ஓங்காரி
சூலி கபாலி துர்க்கை யேமாளி
போற்றும் புதல்வா புனித குமாரா!
சித்தர்கள் போற்றும் தேசிகா!போற்றி!   

    
ஏகாட் சரமாய் எங்கும் தானாகி
வாகாய் நின்ற மறைமுதல் பொருளே
 
துதியட் சரத்தால் தொல்லுல(கு) எல்லாம்
அதிசயமாக அமைத்தவா போற்றி!        
திரியட் சரத்தால் சிவனயன் மாலும்
விரிபா ருலகில் மேன்மையுற் றவனே!
சதுரட் சரத்தால் சாற்றுநல் யோகம்
மதுரமாய் அளிக்கும் மயில்வா கனனே!        
பஞ்சாட் சரத்தால் பரமன் உருவதாய்த்
தஞ்சமென் றோரைத் தழைத்திடச் செய்தென்
நெஞ்சகத் (து) இருக்கும் நித்தனே! சரணம்!
அஞ்சலி செய்த அமரரைக் காக்கும்        
ஆறு கோணமாய் ஆறெழுத் தாகி
ஆறு சிரமும் அழகிய முகமும்
ஆறிரு செவியும் அகன்ற மார்பும்
ஆறிரு கண்ணும் அற்புத வடிவும்  

      
சரவணை வந்த சடாட்சரப் பொருளே!
அரனயன் வாழ்த்தும் அப்பனே கந்தா!
கரங்கள்பன் னிரண்டில் கதிரும் ஆயுதத்தால்
தரங்குலைந் (து) ஓடத் தாரகா சுரன்முதல்        
வேரறச் சூர்க்குலம் முடித்து மகிழ்ந்தாய்!
சீர்த் திருச் செந்தூர்த் தேவசே னாபதி
அஷ்ட குலாசலம் யாவையும் ஆகி

இஷ்டசித் திகளருள் ஈசன் புதல்வா!

துட்டசங் காரா சுப்பிர மண்யா!
மட்டிலா வடிவே வையாபுரித் துரையே!
எண்கோ ணத்துள் இயங்கிய நாரணன்
கண்கொளாக் காட்சி காட்டிய சடாட்சர!        
சைவம் வைணவம் சமரச மாகத்
தெய்வமாய் விளங்கும் சரவண பவனே!
சரியை கிரியை சார்ந்தநல் யோகம்
இரவலர்க்(கு) அருளும் ஈசா போற்றி!  

      
ஏதுசெய் திடினும் என்பால் இரங்கிக்
கோதுகள் இல்லாக் குணமெனக் கருளித்
தரிசனம் கண்ட சாதுவோ(டு) உடன்யான்
அருச்சனை செய்ய அனுக்ரகம் செய்வாய்        
பில்லிவல் வினையும் பீனிச மேகம்
வல்ல பூதங்கள் மாயமாய்ப் பறக்க
அல்லலைப் போக்கிநின் அன்பரொ(டு) என்னைச்
சல்லாப மாகச் சகலரும் போற்ற        
கண்டு களிப்புறக் கருணை அருள்வாய்
அண்டர் நாயகனே அருமறைப் பொருளே!
குட்டிச் சாத்தான் குணமிலா மாடன்
தட்டிலா இருளன் சண்டிவே தாளம்        
சண்டமா முனியும் தக்கராக் கதரும்
மண்டை வலியொடு வாதமும் குன்மமும்
சூலைகா மாலை சொக்கலும் சயமும்
மூலரோ கங்கள் முடக்குள் வலிப்பு  

      
திட்டு முறைகள் தெய்வத சாபம்
குட்டம் சோம்பல் கொடிய வாந்தியும்
கட்டிலாக் கண்ணோய் கண்ணேறு முதலா
வெட்டுக் காயம் வெவ்விடம் அனைத்தும்        
உன்னுடை நாமம் ஓதியே நீறிடக்
கன்னலொன் றதனில் களைந்திடக் கருணை
செய்வதுடன் கடனே செந்தில் நாயகனே!
தெய்வநா யகனே தீரனே!சரணம்!
சரணம் சரணம் சரஹண பவஓம்!

சரணம் சரணம் சண்முகா சரணம்!

 


நன்றிகள்: Youtube Video - SRE BAKTHI


கந்த சஷ்டிக் கவசம் – மூன்றாம் படை வீடு – திருவாவினன் குடி

 




கந்த சஷ்டிக் கவசம் – மூன்றாம் படை வீடு – திருவாவினன் குடி

பழனிப் பதியொளிர் பரமன்

தேவராஜ சுவாமிகள் அருளியது

 

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்(து) ஓங்கும்
நிட்டையுங் கைகூடும், நிமலர் அருள்

கந்தர் சஷ்டி கவசந் தனை
காப்பு
அமரர் இடர்தீர அமரம் புரிந்த
குமரன் அடி நெஞ்சே குறி.


நூல்

திருவாவினன்குடி சிறக்கும் முருகா!
குருபரா குமரா குழந்தைவே லாயுதா!
சரவணா சண்முகா சதாசிவன் பாலா!
இரவலர் தயாபரா ஏழைபங் காளா !       
பரமேஸ் வரிக்குப் பாலா தயாபரா!
வரமெனக் (கு) அருள்வாய் வாமனன் மருகா!
இரண்டா யிரம் வெள்ளம் யோகம் படைத்தவா
திரண்டா ருகமனம் தீர்க்கம் படைத்தவா        
இலட்சத்திருநான்கு நற்றம்பி மாருடன்
பட்சத்துடனே பராசக்தி வேலதாய்
வீர வாகு மிகுதள கர்த்தனாய்
சூர சங்காரா துஷ்ட நிஷ்டூரா        
கயிலாய மேவும் கனக சிம்மாசனா
மயிலேறும் சேவகா வள்ளி மனோகரா!

அகத்திய மாமுனிக் (கு) அருந்தமிழ் உரைத்தவா
சுகத்திரு முறுகாற் றுப்படை சொல்லிய        
நக்கீரன் நற்றமிழ் நலமென வினவிக்
கைக்கீழ் வைக்கும் கனமிசைக் குதவா
திருவருணகிரி திருப்புகழ் பாட
இரும்புகழ் நாவில் எழுதிப் புகழ்ந்தவா        
ஆயிரத்தெட்டாம் அருள்சிவ தலத்தில்
பாயிரம் தோத்திரம் பாடப் புகழ்ந்தவா
எண்ணா யிரம் சமண் எதிர்கழு வேற்றி
விண்ணோர் குமாரன் வியாதியைத் தீர்த்தவா        
குருவாம் பிரமனைக் கொடும்சிறை வைத்தே
உருபொருள் வேதம் உரைத்தாய் சிவனுடன்
கருதிமெய் யோகம்சொல்லியது ஒருமுகம்
அருள்பெறு மயில்மீ (து) அமர்ந்த (து) ஒருமுகம்        
வள்ளிதெய் வானையை மருவிய (து) ஒருமுகம்
தெள்ளுநான்முகன் போல் சிருட்டிப்ப (து) ஒருமுகம்

சூரனை வேலால் துணித்த (து) ஒருமுகம்
ஆரணம் ஓதும் அருமறை யடியார்        
தானவர் வேண்டுவ தருவ (து) ஒருமுகம்
ஞானமுதல்வருக்கு நற்பிள்ளை பழநி
திருப்பரங் கிரிவாழ் தேவா நமோ நம
பொருட் செந்தில் அம்பதி புரப்பாய் நமோ நம        
ஏரகம் தனில்வாழ் இறைவா நமோநம
கூரகம் ஆவினன்குடியாய் நமோநம
சர்வ சங்கரிக்குத் தனயா நமோநம
உறுசோலைமலைமேல் உகந்தாய் நமோநம        
எல்லாக்கிரிக்கும் இறைவா நமோ நம
சல்லாப மாக சண்முகத்துடனே
எல்லாத் தலமும் இனிதெழுந்தருளி
உல்லாசத்துறும் ஓங்கார வடிவே        

மூல வட்டத்தில் முளைத்தெழும் ஜோதியை
சாலமுக்கோணத் தந்தமுச் சக்தியை
வேலாயுதமுடன் விளங்கும் குகனைச்
சீலமார் வயலூர்ச் சேந்தனைத் தேவனை        
கைலாச மேருவாகாசத்தில் கண்டு
பைலாம் பூமியும் பங்கய பார்வதி
மேலும் பகலும் விண்ணுரு வேத்தி
நாற்கோணத்தில் நளினமாய் அர்ச்சனை        

கங்கையீசன் கருதிய நீர்புரை
செங்கண்மால் திருவும் சேர்ந்துசெய் அர்ச்சனை
அக்கினி நடுவே அமர்ந்த ருத்திரன்
முக்கோண வட்டம் முதல்வாயு ருத்திரி        
வாய் அறுகோணம் மகேசுவரன் மகேசுவரி
ஐயும் கருநெல்லி வெண்சாரைதன்மேல்
ஆகாச வட்டத் (து) அமர்ந்த சதாசிவன்
பாகமாம் வெண்மைப் பராசக்தி கங்கை        

தந்திர அர்ச்சனை தலைமேல்கொண்டு
மந்திர மூலத்தில் வாசியைக்கட்டி
அக்கினி குதிரை ஆகாசத்தேவி
மிக்கமாய்க் கருநெல்லிவெண்சாரை உண்பவர்        
பாகமாய் ரதமும் பகல்வழியாவர்
சாகாவகையும் தன்னை அறிந்து
ஐந்து ஜீவனுடன் ஐயஞ்சு கற்பமும்
விந்தை உமைசிவன் மேன்மையும் காட்டி        
சந்திர சூரியர் தம்முடன் அக்கினி
அந்திரனைக்கண் (டு) அறிந்தே யிடமாய்ச்
சிந்தையுள் ஏற்றுச் சிவசம்பு தன்னை
மந்திர அர்ச்சனை வாசிவ என்று        
தேறுமுகம் சென்னி சிவகிரி மீதில்
ஆறுமுகமாய் அகத்துளே நின்று
வாசல் ஒன்பதையும் வளமுடன் வைத்து
யோசனை ஐங்கரன் உடன் விளையாடி

        
மேலைக்கருநெல்லி வெண்சாரை உண்டு
வாலைக்குழந்தை வடிவையும் காட்டி
நரைதிரை மாற்றி நாலையும் காட்டி
உரைசிவ யோகம் உபதேசம் செப்பி        
மனத்தில்பிரியா வங்கண மாக
நினைத்தபடிஎன் நெஞ்சத்திருந்து
அதிசயம் என்றுன் அடியார்க் (கு) இரங்கி
மதியருள் வேலும் மயிலுடன் வந்து        
நானே நீயெனும் லட்சணத் துடனே
தேனே என்னுளம் சிவகிரி எனவே
ஆறா தாரத்து ஆறு முகமும்
மாறாதிருக்கும் வடிவையும் காட்டி        
கனவிலும் நனவிலும் கண்டுனைத் துதிக்கத்
தனதென வந்து தயவுடன் இரங்கிச்
சங்கொடு சக்கரம் சண்முக தரிசனம்
எங்கு நினைத்தாலும் என்முன் னே வந்து        

அஷ்டாவ தானம் அறிந்துடன் சொல்லத்
தட்டாத வாக்கும் சர்வா பரணமும்
இலக்கணம் இலக்கியம் இசையறிந் துரைக்கத்
துலக்கிய காவியம் சொற்பிரபந்தம்        
எழுத்துச் சொற்பொருள் யாப்பலங்காரம்
வாழ்த்தும் என் நாவில்வந்தினி திருந்தே
அமுத வாக்குடன் அடியார்க்கு வாக்கும்
சமுசார சாரமும் தானே நிசமென        
வச்சிர சரீரம் மந்திர வசீகரம்
அட்சரம் யாவும் அடியேனுக்குதவி
வல்லமை யோகம் வசீகர சக்தி
நல்ல உன் பாதமும் நாடியபொருளும்        
சகலகலை ஞானமும் தானெனக் கருளிச்
செகதல வசீகரம் திருவருள் செய்து
வந்த கலிபிணி வல்வினை மாற்றி
இந்திரன் தோகை எழில்மயில் ஏறிக்  

      
கிட்டவேவந்து கிருபை பாலிக்க
அட்டதுட் டமுடன் அனேக மூர்க்கமாய்
துட்டதே வதையும் துட்டப் பிசாசும்
வெட்டுண்ட பேயும் விரிசடை பூதமும்        
வேதாளம் கூளிவிடும்பில்லி வஞ்சனை
பேதாளம் துன்பப் பிசாசுகள் நடுங்க
பதைபதைத்தஞ்சிடப் பாசத்தால் கட்டி
உதைத்து மிதித் (து) அங்கு உருட்டி நொறுக்கிச்        
சூலத்தால் குத்தித் தூளுதூ ளுருவி
வேலா யுதத்தால் வீசிப்பருகி
மழுவிட்டேவி வடவாக்கினி போல்
தழுவிஅக் கினியாய்த் தானே எரித்துச்        
சிதம்பர சக்கரம் தேவி சக்கரம்
மதம்பெறும் காளி வல்ல சக்கரம்
மதியணி சம்பு சதாசிவ சக்கரம்
பதிகர்ம வீரபத்திரன் சக்கரம்  

      
திருவைகுண்டம் திருமால் சக்கரம்
அருள்பெருந் திகிரி அக்கினி சக்கரம்
சண்முக சக்கரம் தண்டா யுதத்தால்
விம்ம அடிக்கும் எல்லாச் சக்கரமும்        
ஏக ரூபமாய் என்முன்னே நின்று
வாகனத் துடன் என் மனத்தில் இருந்து
தம்பனம் மோகனம் தயவாம் வசீகரம்
இம்பமா கருடணம் மேவும் உச் சாடனம்        
வம்பதாம் பேதானம் வலிதரு (ம்) மாரணம்
உம்பர்கள் ஏத்தும் உயிர்வித் வேடனம்
தந்திர மந்திரம் தருமணி அட்சரம்
உந்தன் விபூதி உடனே செபித்துக்        
கந்தனின் தோத்திரம் கவசமாய்க் காக்க
எந்தன் மனத்துள் ஏதுவேண் டியதும்
தந்துரட் சித்தருள் தயாபரா சரணம்
சந்தம் எனக்கருள் சண்முகா சரணம்        
சரணம் சரணம் சட்கோண இறைவா
சரணம் சரணம் சத்துரு சங்காரா
சரணம் சரணம் சரவணபவ ஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்

நன்றிகள்: Youtube Video - SRE BAKTHI